ஆதர்ஷ் முறைகேடு வழக்கில் அசோக் சவானை விடுவிக்க மும்பை உயர்நீதிமன்றம் நீதிமன்றம் மறுப்பு!
மும்பை: மும்பை ஆதர்ஷ் குடியிருப்புகளை ஒதுக்கியதில் நடந்த முறைகேடுகள் குறித்த வழக்கில், முன்னாள் முதல்வர் அசோக் சவான் பெயரை நீக்கக் கோரிய சிபிஐ மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கார்கில் போர் வீரர்களுக்காக மும்பையில் ஆதர்ஷ் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. ஆனால் இந்த வீடுகள் முறைகேடாக பல்வேறு பிரமுகர்களுக்கு, முந்தைய காங்கிரஸ் அரசு ஒதுக்கீடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து கடந்த 2011 ஜனவரி மாதம் மகாராஷ்டிரா அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த விசாரணையில் 25 பேருக்கு சட்டவிரோதமாக வீடுகள் ஒதுக்கியது தெரிய வந்தது.
இந்த ஊழலில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர்கள் அசோக் சவான், விலாஸ்ராவ் தேஷ்முக், சுஷில்குமார் ஷிண்டே மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்குத் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுபற்றி மும்பை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்திய நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல் டி.கே.கவுல், ஏ.ஆர்.குமார், பிரிகேடியர் எம்.எம்.வான்சூ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே இந்த வழக்கில் இருந்து அசோக்சவான் பெயரை நீக்க கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அசோக்சவானை ஆதர்ஷ் ஊழலில் இருந்து விடுவிக்க முடியாது என்று கூறி சி.பி.ஐ. கோரிக்கையை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதனால் அசோக்சவானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications