மணிப்பூர் சட்டசபை தேர்தலில் விஸ்வரூபம் எடுக்கும் ஆயுத படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டம்!
இம்பால்: மணிப்பூர் சட்டசபைத் தேர்தலில் ஆயுத படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை விஸ்வரூபமெடுக்க கூடும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
உத்தரப்பிதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் விவசாயிகள் நடத்திய ஓராண்டு போராட்டம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் தேர்தல் களத்தில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை பிரதான அம்சமாக இருக்கும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். நாகாலாந்தில் அண்மையில் 14 சுரங்க தொழிலாளர்களை ராணுவம் சுட்டுக் கொன்றது.

அமைச்சரவை
ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டமானது, முன்னெச்சரிக்கை இல்லாமல் தேடுதல், தாக்குதல் நடத்த ராணுவத்தினருக்கு அதிகாரம் தருகிறது. ராணுவத்தினரின் மனித உரிமை மீறல்களுக்கு இது கேடயமாக இருக்கிறது என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு. இதனால் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை தங்களது மாநிலத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று நாகாலாந்து மாநில அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.

மணிப்பூரில் விஸ்வரூபம்
இதே கோரிக்கையை மேகாலயா முதல்வரும் வலியுறுத்தி இருந்தார். தேர்தல் நடைபெற உள்ள மணிப்பூரிலும் இந்த கோரிக்கை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. மணிப்பூர் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கெய்சாம் மேகசந்திரா இது தொடர்பாக கூறுகையில், மாநிலத்தில் ஆயுத படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை நீக்க பிரதமர் மோடியை முதல்வர் பைரேன் சிங் வலியுறுத்த வேண்டும் என கூறியிருந்தார். மேலும் நாகாலாந்து அமைச்சரவையைப் போல மணிப்பூர் மாநில அமைச்சரவையும் இச்சட்டத்தை திரும்பப் பெறக் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

காங். வாக்குறுதி
அத்துடன் 2022 சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைத்தால், மணிப்பூர் மாநிலத்தில் உடனடியாக இந்த சட்டத்தை திரும்பப் பெறுவோம் என்றும் கெய்சாம் மேகசந்திரா வாக்குறுதி அளித்துள்ளார். 2017 சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் என்.பி.பி மற்றும் என்.பி.எப் ஆகிய கட்சிகளின் ஆதரவு பாஜக, ஆட்சி செய்து வருகிறது. இம்மாநிலத்தில் ஏற்கனவே பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வருகிறது. தற்போது ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என்ற முழக்கம் ஆளும் பாஜகவுக்கு நெருக்கடியை கொடுக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

தொடரும் மணிப்பூர் போராட்டம்
2004-ம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தில் தங்ஜம் மனோரமா என்ற இளம்பெண்ணை ராணுவத்தினர் கடத்திச் சென்று பலாத்காரம் செய்து சுட்டுக் கொலை செய்த விவகாரம் புயலைக் கிளப்பியது. இச்சம்பவத்தைக் கண்டித்து மணிப்பூரில் பெண்ணிய சமூக செயற்பாட்டாளர்கள் ராணுவத்துக்கு எதிராக நிர்வாணப் போராட்டம் நடத்தி நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்தனர். மேலும் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்திதான் இரோம் சர்மிளா நீண்டகால உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
திமுக - காங்கிரஸ்.. யார் அதிக இடங்களில் போட்டி? புதுச்சேரியில் தொடங்கியது பேச்சுவார்த்தை! -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம்












Click it and Unblock the Notifications