ஆம்பன்: 21 ஆண்டுகளுக்குப் பின்.. சூப்பர் புயலை தில்லாக எதிர்கொள்ள தயாராகும் ஒடிஷா, மே. வங்கம்
புவனேஸ்வர்: 21 ஆண்டுகளுக்குப் பின்னர் மிகப் பெரும் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய சூப்பர் புயலை மீண்டும் எதிர்கொள்ள தயாராகி வருகின்றன ஒடிஷா மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள்.
ஒடிஷாவின் வரலாற்றில் மிகவும் கொடூரமான இழப்புகளையும் படிப்பினைகளையும் தந்ததுதான் 1999-ம் ஆண்டைய சூப்பர் புயல். அப்போது புயல்களுக்கு பெயரிடும் வழக்கம் இல்லாமல் இருந்தது.

சூப்பர் புயல் உக்கிரம்
அந்தமான் கடலில் உருவான சூப்பர் புயல் ஒடிஷாவில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 260 கி,.மீ வேகத்தில் படுபயங்கரமான புயல் காற்று வீசியது. மொத்தம் 36 மணிநேரம் இதே வேகத்தில் அந்த சூப்பர் புயல் ருத்ரதாண்டவமாடியது. ஒடிஷாவின் பல மாவட்டங்கள் உருக்குலைந்து போயின.

50,000 பேர் பலி என அச்சம்
ஒடிஷாவையே நிலைகுலைய செய்த அந்த சூப்பர் புயலுக்கு சுமார் 10 ஆயிரம் பேர் வரை பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் சுமார் 50 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் என அப்போது கூறப்பட்டது. ஒடிஷாவின் ஜகத்சிங்புரில் மட்டுமே அதிகரப்பூர்வமாக 8,119 பேரை அந்த சூப்பர் புயல் காவு கொண்டது.

ஆம்பன் சூப்பர் புயல்
இதற்குப் பின்னர்தான் ஒடிஷாவில் புயல்களை எதிர்கொள்ளும் படிப்பினைகள் விஸ்வரூபம் எடுத்தன. எத்தனை புயல்கள் வந்தாலும் உயிரிழப்புகள் இன்றி அவற்றை கரைசேர்த்து வழிகாட்டி மாநிலமாக திகழ்கிறது ஒடிஷா. இப்போது 21 ஆண்டுகளுக்குப் பின்னர் வங்கக் கடலில் ஆம்பன் என்ற பெயரில் புதிய சூப்பர் புயல் உருவெடுத்திருக்கிறது.

மே 20-ல் கரையை கடக்கிறது
வங்க கடலின் வடகிழக்கில் மேற்கு வங்க மாநிலத்துக்கும் வங்கதேசத்துக்கும் இடையே ஆம்பன் புயல் மே 20-ந் தேதி கரையை கடக்க உள்ளது. இந்த ஆம்பன் புயல் ஒடிஷா, மேற்கு வங்கத்தில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இரு மாநில அரசுகளும் முழு வீச்சில் தயாராக உள்ளன.

பிரதமர் மோடி ஆலோசனை
இதனிடையே ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இதில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் பங்கேற்றனர். ஆம்பன் புயலை எதிர்கொள்ளும் வகையிலான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியிடம் விவரிக்கப்பட்டன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications