நாடாளுமன்றக் கேண்டீனில் இனி காபி, டீ விலை ரூ.5- அசைவ உணவுகளின் விலையும் உயர்வு!
டெல்லி: நாடாளுமன்றக் கேண்டீனில் உணவுப் பொருட்களின் விலை ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போது டீ,காபி ஆகியவற்றின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லியில் அமைந்துள்ள இந்திய நாடாளுமன்றத்தின் கேண்டீனில் அனைத்து உணவுப் பொருட்களும் மானிய விலையில் மிகவும் மலிவாக விற்கப்படுவது ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டன.

சைவ சாப்பாட்டின் விலை ரூபாய் 18ல் இருந்து ரூபாய் 30 ஆகவும், அசைவ சாப்பாட்டின் விலை ரூபாய் 33ல் இருந்து ரூபாய் 60 ஆகவும் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் அப்போது உயர்த்தப்படாமல் இருந்த டீ, காபியின் விலையும் நேற்று உயர்ந்தது. 1 ரூபாயாக இருந்த ஒரு கப் டீயின் விலை ரூபாய் 5 ஆகவும், ரூபாய் 1.50 ஆக இருந்த ஒரு கப் காபி விலை ரூபாய் 5 ஆகவும் உயர்த்தப்பட்டது. அதுபோல், சிக்கன், மட்டன் ஃப்ரை, கறிகளின் விலை ஒரு பிளேட்டுக்கு ரூபாய் 50 ஆக நேற்று அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications