கர்நாடக அரசுக்கு கதம்.. பாஜகவின் அடுத்த குறி எந்த மாநிலத்திற்கு தெரியுமா?
Recommended Video
டெல்லி: கர்நாடக ஆட்சியை எப்படியோ கலைத்தாகிவிட்டது, அடுத்து, பாஜக வேறு ஒரு பெரிய மாநிலத்தை நோக்கி தனது குறியை மாற்றியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத ஆட்சியை கலைக்க, எம்எல்ஏக்கள் ராஜினாமா என்ற திட்டத்தை கையில் எடுத்தது பாஜக. அதன் அடுத்த குறி, காங்கிரஸ் ஆளும் மத்திய பிரதேசம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
மத்திய பிரதேச சட்டசபைத் தேர்தலில், மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 114 இடங்களை காங்கிரஸ் வென்றது. 108 இடங்களைப் பிடித்த பாஜகவை விட சிறு அளவிலான வித்தியாசம்தான்.

கோஷ்டி பூசல்
பெரும்பான்மைக்கு தேவை 116 என்பதால், நான்கு சுயேச்சைகள், இரண்டு பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ ஆகியோரின் உதவியுடன் காங்கிரஸ் அரசு அமைக்க முடிந்தது. ஆனால், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக காங்கிரஸ் கட்சியை ஆட்சியை பிடிக்க முடியாமல் வைத்திருந்த அதே கோஷ்டி பூசல் மீண்டும் வெடித்தது. இது பாஜகவுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பாஜக வலையோடு தயாராகியுள்ளது.

பின்னடைவு
இந்த நிலையில்தான் கர்நாடகாவில் அதிகாரத்தை இழப்பது காங்கிரசுக்கு மிக மோசமான பின்னடைவாகும். அதுவும் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய நேரத்தில், அவருக்குப் பதிலாக எந்தத் தலைவரும் நியமிக்கப்படாத நிலையில் இந்த அடி விழுந்துள்ளது. இப்போதே மத்திய பிரதேசத்தில் ஆபரேஷன் லோட்டஸ் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டது. பல காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் "தொடர்பில் உள்ளனர்" என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

நான்கு கோஷ்டிகள்
காங்கிரஸைப் பொறுத்தவரை ஏறக்குறைய நான்கு பிரிவுகள் உள்ளன. ஜோதிராதித்ய சிந்தியா, அருண் யாதவ், அஜய் சிங் மற்றும் கமல்நாத்-திக்விஜய் சிங் கோஷ்டிகள் நடுவே பெரும் போட்டி நடக்கிறது. காங்கிரசில் உள்ள கோஷ்டிவாதத்தை சாதகமாக்க பாஜக முயன்று கொண்டிருக்கையில், பாஜகவுக்கு "ஈஸியான இலக்கு" என்பது சுயேச்சைகள் மற்றும் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள்தான் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர்.

சுயேச்சைகள் எளிது
கர்நாடகாவிலும் 2 சுயேச்சைகளை தங்கள் பக்கம் இழுப்பதில் பாஜக வெற்றி கண்டது. அதுபோல மத்திய பிரதேசத்திலும், அஸ்திரத்தை ஏவ பாஜக ரெடியாகி வருகிறது. காங்கிரஸ் இல்லாத பாரதம் என்ற கோஷத்தை பாஜக மக்கள் மன்றத்தின் மூலமாக இன்றி, பின் வழி, குறுக்கு வழிகள் வாயிலாகவும் எட்ட முழு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஹரியானா, ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், கர்நாடகாவில் ஆட்சியை இழப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அடியாக பார்க்கப்படுகிறது.
-
மிட்நைட்டில் 4%வாக்குப் பதிவு? 'ஆந்திரா' பாணியில் தேர்தல்? எச்சரித்த நிர்மலா கணவர் -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக் -
அண்ணாமலைக்கு புதிய ‘ரோல்'..தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக கொடுத்த முக்கிய ‘அசைன்மென்ட்' -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
ஊருக்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சை பாஜக நிர்வாகி முரளீதரன்! நயினார் எடுத்த ஆக்ஷன்! -
இங்க இருக்குற திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட்.. அந்த பேச்சு பேசின அஸ்வத்தாமன் பெயர் லிஸ்டில் இல்லையே! -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்?












Click it and Unblock the Notifications