உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின் இயல்பு நிலைக்கு திரும்பிய அயோத்தி
Recommended Video
அயோத்தி: சர்ச்சைக்குரிய நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த போது அயோத்தி நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது அயோத்தி நகரம் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
அயோத்தி நில உரிமை வழக்கில் நவம்பர் 9-ந் தேதி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பளித்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்; முஸ்லிம்கள் மசூதி கட்ட அயோத்தியில் வேறு ஒரு இடத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.

இத்தீர்ப்பு வழங்கப்பட்ட போது நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அயோத்தி நகரில் அனைத்து இடங்களிலும் பெருமளவு போலீசாரும் பாதுகாப்பு படை வீரர்களும் குவிக்கப்பட்டிருந்தனர்.
அங்கு கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான போதும் கூட எந்த ஒரு சிறு அசம்பாவிதமும் நடைபெறவில்லை. அன்று மாலை சரயு நதிக்கரையில் வழக்கமாக நடைபெற்ற தீப ஆராதனை நிகழ்வும் சலசலப்பு ஏதுமின்றி அமைதியாக நடைபெற்றது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான மறுநாள் பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன. இதனையடுத்து அயோத்தியில் கடைகள் திறக்கப்பட்டு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் அயோத்தி நகரின் முக்கிய சில இடங்களில் போலீசார் இன்னமும் தடுப்புகளை அமைத்துள்ளனர்.
மேலும் வாகனங்கள் முழுமையாக சோதனையிடப்பட்டு அனுமதிக்கப்படுகின்றன. இன்று கார்த்திகை பூர்ணிமா என்பதால் பிற மாவட்டங்களில் இருந்தும் பெருமளவு பக்தர்கள் சரயு நதியில் புனித நீராட வருகை தருவர் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் கண்காணிப்பு நடவடிக்கைகளும் அயோத்தியில் தொடருகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications