உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின் இயல்பு நிலைக்கு திரும்பிய அயோத்தி
Recommended Video
அயோத்தி: சர்ச்சைக்குரிய நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த போது அயோத்தி நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது அயோத்தி நகரம் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
அயோத்தி நில உரிமை வழக்கில் நவம்பர் 9-ந் தேதி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பளித்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்; முஸ்லிம்கள் மசூதி கட்ட அயோத்தியில் வேறு ஒரு இடத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.

இத்தீர்ப்பு வழங்கப்பட்ட போது நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அயோத்தி நகரில் அனைத்து இடங்களிலும் பெருமளவு போலீசாரும் பாதுகாப்பு படை வீரர்களும் குவிக்கப்பட்டிருந்தனர்.
அங்கு கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான போதும் கூட எந்த ஒரு சிறு அசம்பாவிதமும் நடைபெறவில்லை. அன்று மாலை சரயு நதிக்கரையில் வழக்கமாக நடைபெற்ற தீப ஆராதனை நிகழ்வும் சலசலப்பு ஏதுமின்றி அமைதியாக நடைபெற்றது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான மறுநாள் பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன. இதனையடுத்து அயோத்தியில் கடைகள் திறக்கப்பட்டு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் அயோத்தி நகரின் முக்கிய சில இடங்களில் போலீசார் இன்னமும் தடுப்புகளை அமைத்துள்ளனர்.
மேலும் வாகனங்கள் முழுமையாக சோதனையிடப்பட்டு அனுமதிக்கப்படுகின்றன. இன்று கார்த்திகை பூர்ணிமா என்பதால் பிற மாவட்டங்களில் இருந்தும் பெருமளவு பக்தர்கள் சரயு நதியில் புனித நீராட வருகை தருவர் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் கண்காணிப்பு நடவடிக்கைகளும் அயோத்தியில் தொடருகின்றன.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications