தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்கக் கோரி வழக்கு: மத்திய அரசுக்கு ஆக்ரா நீதிமன்றம் நோட்டீஸ்
ஆக்ரா: தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு ஆக்ரா நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் ஆக்ராவில் அமைந்துள்ளது. இந்த தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் எனக்கூறி வழக்கறிஞர் ஹரிசங்கர் ஜெயின் தலைமையில் 6 வழக்கறிஞர்கள் ஆக்ரா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

அம் மனுவில், 1212-ம் ஆண்டு ராஜாபரமர்திதேவ் சிவன் கோவிலை கட்டினார். பின்னர் ஜெய்ப்பூர் மன்னர் ராஜாமான்சிங் இதை கைப்பற்றினார். அவருக்குப்பின் அதை ராஜா ஜெய்சிங் நிர்வகித்தார்.
1632-ம் ஆண்டு ஷாஜகான் இதை கைப்பற்றினார். அதன் பிறகு அங்கு மும்தாஜின் நினைவு சின்னம் அமைக்கப்பட்டு முகலாய பாணிக்கு கட்டிடங்களில் மாற்றம் செய்யப்பட்டது எனக் கூறியுள்ளனர்.
இம் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, இது குறித்து அடுத்த மாதம் 6-ந் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசு, உள்துறை செயலாளர் மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
பின்னர் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை மே 13-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications