தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்கக் கோரி வழக்கு: மத்திய அரசுக்கு ஆக்ரா நீதிமன்றம் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

ஆக்ரா: தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு ஆக்ரா நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் ஆக்ராவில் அமைந்துள்ளது. இந்த தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் எனக்கூறி வழக்கறிஞர் ஹரிசங்கர் ஜெயின் தலைமையில் 6 வழக்கறிஞர்கள் ஆக்ரா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

Agra court notices to Centre, ASI over petition claiming Taj Mahal as Shiva temple

அம் மனுவில், 1212-ம் ஆண்டு ராஜாபரமர்திதேவ் சிவன் கோவிலை கட்டினார். பின்னர் ஜெய்ப்பூர் மன்னர் ராஜாமான்சிங் இதை கைப்பற்றினார். அவருக்குப்பின் அதை ராஜா ஜெய்சிங் நிர்வகித்தார்.

1632-ம் ஆண்டு ஷாஜகான் இதை கைப்பற்றினார். அதன் பிறகு அங்கு மும்தாஜின் நினைவு சின்னம் அமைக்கப்பட்டு முகலாய பாணிக்கு கட்டிடங்களில் மாற்றம் செய்யப்பட்டது எனக் கூறியுள்ளனர்.

இம் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, இது குறித்து அடுத்த மாதம் 6-ந் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசு, உள்துறை செயலாளர் மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

பின்னர் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை மே 13-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+