ரிவால்வர் ராணி.. பெண் போலீஸின் அதிர்ச்சி வீடியோ.. வெயிட்டிங் லிஸ்ட் வரை சென்ற விவகாரம்..!
துப்பாக்கியுடன் பெண் போலீஸ் பதிவிட்ட வீடியோ வைரலாகிறது
ஆக்ரா: உத்தரப்பிரதேசத்தில் பணியாற்றி வரும் ஒரு பெண் போலீஸ்.. கையில் துப்பாக்கியுடன் எடுத்த வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. இது அவருக்கு சிக்கலை கொடுத்து உள்ளது.
டிக்டாக் ஆப்பை தடை செய்தாலும், அதன்மீதான மோகம் இன்னும் பலருக்கு குறையவில்லை.. டிக்டாக்கில் லைக்ஸ்களை அள்ளுவதற்காக வரம்பு மீறி அட்டகாசம் செய்து கொண்டிருந்தவர்கள், இப்போது அப்படியே யூடியூப் பக்கம் தாவி வருகின்றனர்.
தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஏராளமானோர் வீடியோக்களை பதிவிட்டு வரும்நிலையில், இந்த ஆசை காவல்துறையையும் விட்டுவைக்கவில்லை.. அந்த வகையில், பெண் போலீஸ் ஒருவர், வீடியோ போட்டு தனக்கு தானே வேலையில் சிக்கலை இழுத்து கொண்டுள்ளார்.

ஆக்ரா
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவின் எம்எம் கேட் பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் இயங்கி வருகிறது.. இங்கு கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வரும் பெண் பெயர் பிரியங்கா மிஸ்ரா... இவர் கடந்த 21ம் தேதி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.. அதில் யூனிபார்முடன் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு "ரங்க்பாஸி" பற்றிய வசனத்துக்கு வாயசைத்து அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

வசனம்
அந்த வீடியோ வைரலாகி பலருக்கும் அதிர்ச்சியை தந்தது.. அந்த வீடியோ 37 வினாடி ஓடுகிறது.. ''உபியில், 5 வயது குழந்தைகளுக்கும்கூட துப்பாக்கிகளுடன் விளையாடத் தெரியும்" என்று அந்த வசனம் இருக்கும்.. இதை ஒரு பெண் போலீஸே கையில் துப்பாக்கியுடன் பேசுவதுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. எதிர்மறை விமர்சனங்களும் கிளம்பியது..

வீடியோ
இந்த வீடியோ ஆக்ரா போலீசாரின் கவனத்துக்கும் வந்தது.. இதையடுத்து, ஆக்ராவின் எஸ்எஸ்பி எனப்படும் காவல் கண்காணிப்பாளர் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டார்... மேலும் பிரியங்கா மிஸ்ரா காத்திருப்போர் பட்டியலிலும் வைக்கப்பட்டுள்ளார்... அதுமட்டுமல்ல, அந்த ரிவால்வர் பெண் போலீசுக்கு வழங்கப்படவே இல்லை..

விதிமீறல்
அவருக்கு வழங்கப்படாத ரிவால்வரை கொண்டு வீடியோ வெளியிட்டது விதிமீறலையும் வெளிக்காட்டியுள்ளது... நாலாபக்கமிருந்தும் கடுமையான விமர்சனங்கள் கிளம்பியதையடுத்து, அந்த வீடியோ இன்ஸ்ட்டாகிராமில் இருந்து பிரியங்கா மிஸ்ரா நீக்கி உள்ளார்.. துறை ரீதியான நடவடிக்கைகள் முடிந்தபிறகு, பெண் போலீஸ் தன்னுடைய பணியில் மீண்டும் இணைவார் என்கிறார்கள்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications