கால்வாசி கிணறுதான் தாண்டியுள்ளோம்... "தேசிய வங்கிக் கடன்களும் தள்ளுபடி செய்யும் வரை போராட்டம்"
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
டெல்லி: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை மட்டும் தளளுபடி செய்தால் போதாது, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று டெல்லியைக் கலக்கிக் கொண்டிருக்கும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
வறட்சி நிவாரணம், பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22 நாள்களாக விவசாயிகள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க எலிக்கறி, பாம்புக் கறி திண்பது, அரை மொட்டை அடித்துக் கொள்வது, பாதி மீசையை எடுத்துக் கொள்வது உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். எனினும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இந்நிலையில் போராட்டம் நாளுக்கு நாள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கடந்த 2016-இல் தமிழக அரசு ஆணை பிறப்பித்ததை எதிர்த்து அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பளித்தது.
சிறு,குறு விவசாயிகள் பெற்ற கடன் மட்டுமின்றி அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய அய்யாக்கண்ணு தனது மனுவில் கோரியிருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், கூட்டுறவு வங்கிகளில் 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களையும் ரத்து செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் ரத்து செய்ய உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். எனினும் இது மட்டுமே போதாது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களையும் மத்திய அரசு தள்ளுபடி செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications