மகாராஷ்டிராவில் கோர விபத்து: 500 அடி ஆழ பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து கல்லூரி மாணவர்கள் 33 பேர் பலி!
மகாராஷ்டிராவில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் 33 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
ராய்காட்: மகாராஷ்டிராவில் சுற்றுலா பேருந்து 500 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் 33 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
மகாராஷ்டிரா மாநிலம் டபோலி வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசியர்கள் பேருந்து ஒன்றில் சுற்றுலா சென்றனர்.

ராய்காட் மாவட்டத்தில் அவர்களின் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மகத்- பொலட்பூர் இடையே மலைப்பகுதியில் சென்றபோது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
நிலைத்தடுமாறிய பேருந்து 500 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது. இதில் பேராசியர்கள் மாணவர்கள் என 33 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பேருந்தில் 34 பேர் பயணம் செய்ததாக தெரிகிறது. இந்த விபத்தில் பிரகாஷ் சாவந்த் என்ற மாணவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார்.
புனேவில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். உள்ளூர் மக்களின் உதவியுடன் உடல்களை மீட்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர் கொத்தாக பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications