ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு.. முன்னாள் விமானப்படை தளபதி தியாகிக்கு மேலும் 3 நாள் காவல்
டெல்லி: அக்ஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் முறைகேடு வழக்கில், முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி.தியாகியின் சிபிஐ காவல் மேலும் 3 நாட்களூக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில், வி.ஐ.பிகளுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்கியபோது நடந்த முறைகேட்டில் அப்போது விமானப்படை தளபதியாக இருந்த தியாகி பெயர் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டது. 2013ல் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை, தியாகி, கவுதம் கைதான் மற்றும் சஞ்சிவ் தியாகி ஆகியோர் சிபிஐயால் கைது செய்யப்பட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். டிசம்பர் 14ம்தேதியான இன்று வரை அவர்களுக்கு காவல் விதித்திருந்தது கோர்ட்.
கோர்ட் குறிப்பிட்ட தேதி முடிந்த நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தியாகி உள்ளிட்டோருக்கு மேலும் 3 நாட்கள் காவல் விதித்துள்ளது நீதிமன்றம். பண மதிப்பிழப்பு பிரச்சினையை திசை திருப்ப தியாகி இப்போது கைது செய்யப்பட்டதாகவும், மூன்றாந்தர விசாரணையை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாகவும் தியாகி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications