Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த 3 பேரை பணி நீக்குங்க.. ஏர் இந்தியாவுக்கு மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் கடந்த 12ம் தேதி கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் விமானத்தில் பயணித்த 241 பயணிகள் உள்பட மொத்தம் 274 பேர் இறந்தனர். இந்த விவகாரத்தில் பணியில் அலட்சியமாக இருந்த 3 அதிகாரிகளை வேலையில் இருந்து நீக்க மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் ‛ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12ம் தேதி மதியம் 1:39 மணிக்கு லண்டனுக்கு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட அடுத்த ஒரு நிமிடத்தில் விபத்தில் சிக்கியது.

air-india-crash-dgca-ordered-to-removal-of-3-officials-for-lapses

விமான நிலையத்தின் அருகே உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் என்று மொத்தம் 242 பேர் பயணம் செய்தனர். இதில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் பலியாகி உள்ளனர். மேலும் விமானம் விழுந்த விடுதி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் இருந்தவர்களும் பலியாகினர். மொத்தம் இதுவரை 274 பேர் பலியாகி உள்ளனர்.

இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் பணியில் அலட்சியமாக செயல்பட்ட குற்றச்சாட்டில் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் 3 அதிகாரிகளை வேலையில் இருந்து நீக்க மத்திய மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவு நேற்று பிறக்கப்பட்டுள்ளது.

அதில், ‛‛விபத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தொடர்ச்சியான விதிமீறல் நடந்து இருப்பது தெரியவந்துள்ளது. பல்வேறு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உரிமம், பணியாளர்களின் ஓய்வு தொடர்பான விதிகள் உள்பட சிஸ்டமெட்டிக் பெயிலியர்ஸ் என பல்வேறு வகைகளில் விதி மீறப்பட்டுள்ளது.

விதிமுறைகளுக்கு புறம்பாக பணியில் அதிகாரிகள் அலட்சியம் காட்டியது தெரியவந்தது. இதனால் டிவிஷனல் துணை தலைவர் சோரா சிங், பணி ஒதுக்கீடு செய்யும் பிரிவின் தலைமை மேலாளர் பிங்கி மிட்டல், பணி ஒதுக்கீடு செய்யும் திட்டமிடல் பிரிவு அதிகாரி பாயல் அரோரா ஆகியோரை பணியில் இருந்து நீக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+