இந்த 3 பேரை பணி நீக்குங்க.. ஏர் இந்தியாவுக்கு மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு
அகமதாபாத்: அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் கடந்த 12ம் தேதி கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் விமானத்தில் பயணித்த 241 பயணிகள் உள்பட மொத்தம் 274 பேர் இறந்தனர். இந்த விவகாரத்தில் பணியில் அலட்சியமாக இருந்த 3 அதிகாரிகளை வேலையில் இருந்து நீக்க மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் ‛ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12ம் தேதி மதியம் 1:39 மணிக்கு லண்டனுக்கு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட அடுத்த ஒரு நிமிடத்தில் விபத்தில் சிக்கியது.

விமான நிலையத்தின் அருகே உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் என்று மொத்தம் 242 பேர் பயணம் செய்தனர். இதில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் பலியாகி உள்ளனர். மேலும் விமானம் விழுந்த விடுதி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் இருந்தவர்களும் பலியாகினர். மொத்தம் இதுவரை 274 பேர் பலியாகி உள்ளனர்.
இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் பணியில் அலட்சியமாக செயல்பட்ட குற்றச்சாட்டில் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் 3 அதிகாரிகளை வேலையில் இருந்து நீக்க மத்திய மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவு நேற்று பிறக்கப்பட்டுள்ளது.
அதில், ‛‛விபத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தொடர்ச்சியான விதிமீறல் நடந்து இருப்பது தெரியவந்துள்ளது. பல்வேறு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உரிமம், பணியாளர்களின் ஓய்வு தொடர்பான விதிகள் உள்பட சிஸ்டமெட்டிக் பெயிலியர்ஸ் என பல்வேறு வகைகளில் விதி மீறப்பட்டுள்ளது.
விதிமுறைகளுக்கு புறம்பாக பணியில் அதிகாரிகள் அலட்சியம் காட்டியது தெரியவந்தது. இதனால் டிவிஷனல் துணை தலைவர் சோரா சிங், பணி ஒதுக்கீடு செய்யும் பிரிவின் தலைமை மேலாளர் பிங்கி மிட்டல், பணி ஒதுக்கீடு செய்யும் திட்டமிடல் பிரிவு அதிகாரி பாயல் அரோரா ஆகியோரை பணியில் இருந்து நீக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications