இட்லி வடையில் செத்த கரப்பான்பூச்சி… ஏர் இந்தியா விமானத்தில் இந்த கூத்து… பயணிகள் அதிர்ச்சி
போபால்:ஏர் இந்தியா விமானத்தில் விநியோகிக்கப்பட்ட காலை உணவில் கரப்பான் பூச்சி கிடந்ததால் பயணி அதிர்ச்சி அடைந்தனர்.
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் இருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று சென்றது. அந்த விமானத்தில் ரோகித் ராஜ் சிங் சவுகான் என்பவர் பயணித்துள்ளார்.
பயணத்தின் போது அவருக்கு காலை உணவாக சாம்பாருடன் இட்லி வடை விநியோகிக்கப்பட்டது. அந்த உணவில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது. அதை கண்ட அந்த பயணி அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் ஊழியர்களிடம் புகார் கூறியுள்ளார் ஆனால் அவர்கள் அவரது புகாரை ஏற்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் புகார் ஏற்க மறுத்தால் ரோகித் ராஜ் சிங் சவுகான் உணவில் இருந்த கரப்பான் பூச்சி புகைப்படத்தை எடுத்துள்ளார்.
பின்பு அந்த புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட.. விவகாரம் பரபரப்பானது. அத்துடன் இத்தைகைய செயலுக்கு ஏர் இந்தியா நிறுவனம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏர் இந்தியா நிர்வாகம், அதுபோன்ற எந்த புகாரும் வரவில்லை என்று மறுப்பு தெரிவித்து உள்ளது.