ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்... ப.சிதம்பரத்தின் நடவடிக்கைகள் குறித்தும் விசாரிக்கிறது சிபிஐ
டெல்லி: ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அளித்த அனுமதி குறித்து சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவரம் டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவனம், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமம் கோரி விண்ணப்பித்தது. அப்போது தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பல காரணங்களை கூறி உரிமம் வழங்கவில்லை.
பின்னர் மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல்லின் பங்குகள் விற்கப்பட்ட நிலையில் ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்பட்டது. இதில் மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல்லின் பங்குகளை விற்றாக வேண்டும் என்று அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், சிவசங்கரனை மிரட்டினர் என்பது புகார்.

குற்றச்சாட்டு பதிவுக்கான விசாரணை
இதற்கு பிரதிபலனாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் குழுமத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ600 கோடி முதலீடு செய்தது என்கிறது சிபிஐ. இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவது குறித்து வரும் 23-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.

சிதம்பரமும் சிக்குகிறார்
இந்த நிலையில் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் அளித்த அனுமதி குறித்தும் விசாரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ன செய்தார் சிதம்பரம்
சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் ரூ.600 கோடி அளவுக்கான முதலீடுகளுக்கு மட்டும் மத்திய நிதியமைச்சர் ஒப்புதல் அளிக்க அதிகாரம் பெற்றுள்ளார். அதற்கு மேலான முதலீடுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைதான் ஒப்புதல் அளிக்க முடியும்.

எப்படி ஒப்புதல் அளித்தார்?
ஆனால், ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில் ரூ 4, 800 கோடி அளவிலான முதலீட்டுக்கு எந்த அடிப்படையில் சிதம்பரம் ஒப்புதல் அளித்தார் என்பதை சிபிஐ விசாரித்து வருகிறது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிதம்பரம் மீதும் விசாரணை
இதனால் ப.சிதம்பரத்தின் செயல்பாடுகள் குறித்தும் தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications