ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தால் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது: சொல்கிறார் சு.சாமி
டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் மிகப் பெரிய ஊழல் ஆகும். இதன் மூலம் நமது தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சின்னக்கண்ணன் சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவனத்தை அவரை கட்டாயப்படுத்தி மலேசிய தொழில் அதிபரான டி. அனந்த கிருஷ்ணனுக்கு சொந்தமான மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க வைத்ததாக முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது சிபிஐ கடந்த 2011ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இந்த ஒப்பந்தத்தை முடித்துக் கொடுத்ததற்காக மேக்சிஸ் நிறுவனம் மாறன் குடும்பத்தாருக்கு சொந்தமான நிறுவனத்தில் முதலீடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த ஒப்பந்தம் ஏற்பட உதவிய தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் ரூ. 550 கோடி லஞ்சம் வாங்கியதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில்,
தயாநிதி மாறன் ஒரு இந்திய நிறுவனத்தை கட்டாயப்படுத்தி வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்க வைத்துள்ளார். இதில் தனக்கு 100 சதவீத பங்குகள் கிடைக்கும்படி பார்த்துக் கொண்டிருக்கிறார் அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம். இந்த ஒப்பந்தம் மிகப் பெரிய ஊழல் ஆகும். இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications