குஜராத் மத்திய பல்கலைக் கழக மாணவர் சங்க தேர்தல்: பாஜக மாணவர் அமைப்பு ஏபிவிபி படுதோல்வி
அகமதாபாத்: குஜராத் மத்திய பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தல்களில் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி படுதோல்வியை சந்தித்துள்ளது.
குஜராத் மத்திய பல்கலைக் கழக மாணவர் சங்கத் தேர்தல் வெற்றிக்கிழமை நடைபெற்றது. ஏபிவிபியின் 5 வேட்பாளர்களையும் இடதுசாரி மாணவர் அமைப்புகள் மற்றும் காங்கிரஸ் மாணவர் அமைப்பான என்.எஸ்.யூ.ஐ. ஆகியவை தோற்கடித்துள்ளன.
இத்தேர்தலில் முதல் முறையாக இடதுசார்ரி மாணவர் அமைப்பினர் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற்றுள்ளனர். பிர்ஷா அம்பேத்கர் பூலே மாணவர் அமைப்பினர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர்.
ஆனால் ஏபிவிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்குப் பதிவு நடைபெற்ற்ற நாளில் ஆய்வகங்கள் உள்ளிட்டவை இயங்கி வந்தன. இதனால் மாணவர்கள் வாக்களிக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். பல்கலைக் கழக நிர்வாகம் விதிகளை மீறி இடதுசாரி மாணவர் அமைப்பினருக்கு உதவியுள்ளனர் என குற்றம்சாட்டியுள்ளது.