குஜராத் தேர்தல் முடிவிற்கு பின் ராகுலுக்கு வந்த எஸ்எம்எஸ்... அவர் அனுப்பிய பதில் என்ன தெரியுமா?
குஜராத் தேர்தல் முடிவிற்கு பின் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அல்பேஷ் தாக்குர் முக்கியமான எஸ்எம்எஸ் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.
Recommended Video

அஹமதாபாத்: குஜராத் தேர்தல் முடிவிற்கு பின் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அல்பேஷ் தாக்குர் முக்கியமான எஸ்எம்எஸ் ஒன்றை அனுப்பி இருக்கிறார். இந்த எஸ்எம்எஸ்க்கு ராகுல் காந்தி உடனே பதில் அனுப்பி உள்ளார்.
அல்பேஷ் தாக்குர் மூலம் இந்த எஸ்எம்எஸ் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த விவரம் குஜராத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
அல்பேஷ் தாக்குர் ராகுலுக்கு ''நாம் வென்று விட்டோம்'' என்று எஸ்எம்எஸ் செய்து இருக்கிறார். இதற்கு ராகுல் மிகவும் அழகாக பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

அல்பேஷ் தாக்குர்
குஜராத் தேர்தலில் ஹர்திக் பட்டேல், ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாக்குர் என்ற மூன்று இளம் தலைவர்களும் முக்கிய பங்கு வகித்தார்கள். இதில் ஜிக்னேஷ் மேவானி வட்காம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று இருக்கிறார். பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவராக பார்க்கப்படும் காங்கிரஸின் அல்பேஷ் தாக்குர் ரந்தன்பூர் தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறார். இவர் 85,777 வாக்குகள் பெற்றார்.

குஜராத் மாநில தலைவரா?
குஜராத்தில் காங்கிரசின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அல்பேஷ் தாக்குர் பார்க்கப்படுகிறார். மேலும் இவருக்கான வாக்கு வங்கி மிகவும் அதிகமாக இருக்கிறது. அதேபோல் காங்கிரஸ் மேலிடத்திடம் இவர் மிகவும் நெருக்கமாக உள்ளார். இந்த நிலையில் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக அல்பேஷ் தாக்குர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ராகுலுக்கு எஸ்எம்எஸ்
குஜராத் தேர்தல் முடிவுகள் வெளியான பின் இன்று அல்பேஷ் தாக்குர் ராகுல் காந்திக்கு எஸ்எம்எஸ் ஒன்று அனுப்பி உள்ளார். அந்த எஸ்எம்எஸ்ல் ''நாம் வென்றுவிட்டோம்'' என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ராகுல் காந்தி, குஜராத் மக்களுக்கு தேர்தலில் ஆதரவு அளித்ததற்கு நன்றி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் அனுப்பிய பதில்
தற்போது அல்பேஷ் தாக்கூரின் எஸ்எம்எஸ்க்கு ராகுல் காந்தி பதில் அனுப்பி உள்ளார். அதில் ''ஆம் சகோதரா. காங்கிரஸ் வென்றுவிட்டது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது இந்த எஸ்எம்எஸ் குறித்த செய்தி காங்கிரஸ் கட்சியினர் இடையே நேர்மறை எண்ணங்களை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம்












Click it and Unblock the Notifications