அதென்ன உங்க ராணுவம்... ஒட்டுமொத்த தேசத்துக்குமே சொந்தம்... மோடிக்கு அமரீந்தர் சிங் 'குட்டு/'
அமிர்தசரஸ்: நாட்டின் ராணுவத்தை தமது அரசியல் லாபங்களுக்காக பிரதமர் மோடி பயன்படுத்துவதாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் சூனமில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கேவல்சிங் தில்லானை ஆதரித்து அமரீந்தர் சிங் பேசியதாவது:

பாலகோட் தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மோடி என்னுடைய ராணுவம் என்று பேசிவருகிறார். அது ஒன்றும் மோடிக்குச் சொந்தமான ராணுவம் அல்ல.
ஒட்டுமொத்த தேசத்துக்குமே சொந்தமான ராணுவம். நானும் கூட ராணுவத்தில் 10 ஆண்டுகாலம் பணியாற்றியிருக்கிறேன். நான் பணியாற்றியது தேசத்துக்குத்தானே தவிர மோடிக்காக அல்ல.
இந்த தேசத்தின் பெரும் பலமான ஒற்றுமையை பாஜகவும் மோடியும் சீரழித்துவிட்டனர். இந்த தேர்தலானது மதவாத அரசியலை முன்னெடுக்கும் சக்திகளுக்கும் மதச்சார்பற்ற இந்தியாவை கட்டமைக்கும் சக்திகளுக்கும் இடையேயானது.
இவ்வாறு அமரீந்தர் சிங் பேசினார்.












Click it and Unblock the Notifications