வேட்டி கட்டிய வாஜ்பாய்… வழுக்கைத் தலை அமீத் ஷா… கண்ணாடி போட்ட சோனியா...!!
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சாதாரண வேட்டி, குர்தா மற்றும் நேரு கோட் போட்டிருப்பார். காலில் செருப்பு போட்டிருப்பார்.
அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும்.. இதெல்லாம் முக்கிய தலைவர்கள் குறித்து பாதுகாப்புத்துறையினர் சேகரித்து வைத்துள்ள தகவல்களாகும்.

இந்தத் தகவல்களை 2009 ஆம் ஆண்டு பாதுகாப்புத் துறையினர் சேகரித்து வைத்துள்ளனர். இதேபோல பல தலைவர்கள் குறித்த முக்கியத் தகவல்களையும் பாதுகாப்புத் துறையினர் சேகரித்து வைத்துள்ளனர். அமீத் ஷாவுக்கு தலை வழுக்கையாக இருக்கும். சுஷ்மா சுவராஜ் சாதாரண ஹேர்ஸ்டைலுடன் இருப்பார்.. இது அதில் சில.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண் கண்ணாடி போட்டுத்தான் படிப்பார் என்று 1998 ஆம் ஆண்டு சேகரிக்கப்பட்ட ஒரு தகவல் கூறுகிறது. மேலும் அவருக்கு இத்தாலியன், ஆங்கிலம், இந்தி பேச வரும் என்றும் தகவல் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. அவர் குறித்த தகவல்களை 2004, 2009, 2010, 2012 ஆகிய ஆண்டுகளிலும் சேகரித்துள்ளனர்.
அமீத் ஷா குறித்த புதிய தகவல் சேகரிப்பின்படி அவர் தாடி மீசை வைத்திருப்பார். குர்தா பைஜாமா போடுவார் என்று கூறப்பட்டுள்ளது.
அத்வானி குறித்த தகவலில் அவர் குர்தா பைஜாமா போடுவார். அவரது நெருங்கிய நண்பர்கள் வாஜ்பாயும், சுஷ்மாவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுஷ்மா குறித்த தகவலில் சிம்பிளான புடவை அணிவார். நெற்றியில் பிந்தி வைத்திருப்பார். சாதாரண ஹேர்ஸ்டைலுடன் காணப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் ராகுல் காந்தி வீட்டுக்குச் சென்ற டெல்லி காவல்துறையினர் அவர் குறித்த தகவல்களை சேகரித்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த நிலையில் இப்படிப்பட்ட தகவல் சேகரிப்பு அனைத்துத் தலைவர்களிடமும் பாதுகாப்பு கருதி சேகரிக்கப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications