அமித்ஷா தான் மிகப்பெரிய 'பப்பு'.. நிலக்கரி ஊழல் வழக்கில் சிக்கிய மம்தா பானர்ஜி மருமகன் விளாசல்
கொல்கத்தா: அமித்ஷா தான் மிகப்பெரிய பப்பு என்றும், மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் இன்றி அமித்ஷாவால் அரசியல் செய்ய இயலாது என்றும் நிலக்கரி ஊழல் வழக்கில் சிக்கிய மம்தா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி.. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான இவர் மீது நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டு உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக அபிஷேக் பானர்ஜியிடம் ஏற்கனவே இரண்டு முறை அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது.

அமித்ஷாவை விமர்சித்த அபிஷேக்
இந்த நிலையில், 3-வது முறையாக நேற்று அமலாக்கத்துறை அபிஷேக் பானர்ஜியிடம் நேற்று விசாரணை நடத்தியது. சுமார் 8 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அபிஷேக் பானர்ஜியிடம் கிடுக்கிப்படி விசாரணை நடத்தியது. இந்த விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அபிஷேக் பானர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கடுமையாக சாடினார். இது தொடர்பாக அபிஷேக் பானர்ஜி கூறியதாவது:-

அமித்ஷா தான் பப்பு
பாஜக மற்றொரு கட்சியின் தலைவரை பப்பு என்று கூறுகிறது. ஆனால், உண்மையில் அமித்ஷா தான் மிகப்பெரிய பப்பு.. மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் இன்றி அமித்ஷாவால் அரசியல் செய்ய இயலாது. நிலக்கரி ஊழலுடன் சிஐஎஸ்எஃப் படையினருக்கு தொடர்பு இருக்கிறது. எல்லையில் பசு கடத்தல் நடக்கும் போது எல்லை பாதுகாப்பு படை என்ன செய்து கொண்டிருகிறது. இது பசு கடத்தல் ஊழல் கிடையாது. உள்துறை அமைச்சரின் ஊழல். உள்துறை இணை அமைச்சர் நிஷித் பிரம்னாயக் பசு திருடன்.

பாஜக முன் தலை வணங்க மாட்டேன்
பசு கடத்தல் தொடர்பான விசாரணை பசு திருடர்களாலேயே மேற்கொள்ளப்படுகிறது. சட்ட விரோதமாக ஐந்து பைசா வாங்கியிருந்ததாக யாராவது நிரூபித்தால் கூட நான் தூக்குக்கு தயராக உள்ளேன். 30 முறை கூட விசாரணைக்கு ஆஜராக நான் தயராக இருக்கிறேன். மேற்கு வங்காள மக்கள் முன் தலைவணங்க தயாராக இருக்கிறேன். ஆனால் பாஜக முன் ஒருபோதும் தலைவணங்க மாட்டேன்'' என்றார்.

அமித்ஷா மகன் குறித்து பேச்சு
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனும் பிசிசிஐ செயலருமான ஜெய் ஷா, இந்தியா பாகிஸ்தான் இடையேன கிரிக்கெட் போட்டியின் போது தேசியக்கொடியை வாங்க மறுத்ததாக சர்ச்சை எழுந்தது குறித்து விமர்சித்த அபிஷேக் பானர்ஜி கூறுகையில், ''மேற்கு வங்க மக்களுக்கு தேச பக்தியை கற்று கொடுப்பதற்கு முயற்சிப்பதற்கு முன்பாக அமித்ஷா முதலில் தனது மகனுக்கு தேசபக்தியை கற்றுகொடுக்கட்டும்'' என்று விமர்சித்துள்ளார்.

7 முறை விசாரணை
மேலும் அவர் கூறுகையில், ''மகனை விமர்சிப்பதால் எனக்கு எதிராக விசாரணை அமைப்புகளை கட்டவிழ்த்து விட்டு என்னை பயமுறுத்தி விடலாம் என்று அமித்ஷா கருதினால் அவர் தவறாக புரிந்து கொண்டுள்ளார் என்றுதான் அர்த்தம். இதுவரை என்னிடமும் எனது மனைவியிடமும் ஏழு முறை விசாரணை நடத்தியிருக்கின்றனர். இதன் முடிவுகள் வெறும் பூஜ்ஜியம்தான். லஞ்சம் வாங்கும் போது கேமிராவில் சிக்கிய பாஜக தலைவர்களை இதுவரை மத்திய விசாரணை அமைப்புகள் சம்மன் கொடுத்து விசாரணைக்கு அழைக்கவில்லை'' என்றார்.
-
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications