ஆம்பன் சூப்பர் புயல்- ஒடிஷாவின் சபாஷ் நடவடிக்கை- 12 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்
புவனேஸ்வர்: ஆம்பன் சூப்பர் புயல் நாளை மறுநாள் கரையை கடக்க உள்ள நிலையில் ஒடிஷாவில் 12 கடலோர மாவட்டங்களில் உள்ள 12 லட்சம் மக்கள் இன்று முதல் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
Recommended Video
வங்க கடலில் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சூப்பர் புயல் உருவெடுத்துள்ளது. ஆம்பன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர் புயல் வரும் 20-ந் தேதி கரையை கடக்க உள்ளது.
மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் ஆகியவற்றுக்கு இடையே இந்த சூப்பர் புயல் கரையை கடக்க உள்ளது. இப்புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 200கி.மீ அதிகமான வேகத்தில் புயல் காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களில் முன்னெச்சரிக்கை
ஆம்பன் புயலை எதிர்கொள்ளும் வகையில் ஒடிஷா, மேற்கு வங்க மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் ஒடிஷா, மேற்கு வங்க மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஒடிஷாவில் கடலோர மாவட்ட மக்களை வெளியேற்றும் பணி தொடங்கியுள்ளது.

12 லட்சம் பேர் வெளியேற்றம்
ஒடிஷாவின் 12 கடலோர மவட்டங்களில் வசிக்கும் சுமார் 12 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகளில் மாவட்ட ஆட்சியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இன்று தொடங்கியுள்ள இந்த பணி நாளை பிற்பகல் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு பானி புயலின் போதும் இதேபோல் பல லட்சக்கணக்கான மக்களை முன்னரே ஒடிஷா அரசு பாதுகாப்பாக வெளியேற்றியதால் உயிர் சேதம் ஏற்படவில்லை.

மக்களுக்கான முகாம்கள்
தற்போது பாதுகாப்பாக வெளியேற்றப்படும் மக்கள் தங்குவதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு வசதிகள் கொண்ட 600 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 7,092 நிரந்தர கட்டிடங்களும் இந்த மக்களுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்து அழைத்து வரப்படும் மக்களுக்கான குடிநீர், உணவு, கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன.

தயார் நிலை
ஒடிஷா மாநில தலைமை செயலாளர் அசித் திரிபாதி கூறுகையில், ஒடிஷாவில் ஆம்பன் புயல் கரையை கடந்தாலும் கூட அதை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறோம். கடந்த கால புயல் தாக்குதல்களில் இருந்து நாங்கள் பாடம் கற்றுள்ளோம். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறோம். இதற்காக சிறப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்றார். பாதிப்புக்குள்ளாகும் கடலோர மாவட்டங்களில் ஒட்டுமொத்த ஒடிஷா அரசு நிர்வாகமும் களமிறக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications