Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பச்சிளம் குழந்தை".. வர மறுத்த ஆம்புலன்ஸ்.. பைக் பெட்டியில் உடலை எடுத்து சென்ற தந்தை.. சோகம்!

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்தியப் பிரதேசத்தில் தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்த உடன் இறந்த நிலையில் அக்குழந்தையை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் சேவையை மருத்துவமனை வழங்க மறுத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதன் காரணமாக பெற்றோர்கள் உயிரிழந்த குழந்தையை பைக்கில் உள்ள பெட்டியில் வைத்து எடுத்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆட்சியர் கூறியுள்ளார்.

குழந்தை இறப்பு

குழந்தை இறப்பு

இந்தியாவில் பிரசவத்தின் போது குழந்தை இறப்பு என்பது அதிக அளவில் இல்லையென்றாலும், வட மாநிலங்களில் இந்த சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. கடந்த 2020ம் ஆண்டு 1,000 குழந்தைகளுக்கு 3.9% என்கிற அளவில் இந்த இறப்பு விகிதம் இருந்தது. ஆனால் 2021ம் ஆண்டு 4.2 ஆக இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தில் குழந்தை ஒன்று பிறந்த உடன் உயிரிழந்துள்ளது. ஆனால் அக்குழந்தையை வீட்டிற்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் சேவை மறுக்கப்பட்டுள்ளது.

 பிரசவம்

பிரசவம்

இதனையடுத்து அக்குழந்தையை அவர்கள் தங்கள் பைக்கில் வைத்தவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து உறவினர்கள் கூறியுள்ளதாவது, "தினேஷ் பாரதி எனும் நபர் பிரசவத்திற்காக தனது மனைவியை அருகில் உள்ள தனியார் கிளினிக்கில் அனுமதித்துள்ளார். அவர்கள் ரூ.5,000 கேட்டுள்ளனர். ஆனால் இவர் தன்னிடம் ரூ.3,000 மட்டுமே இருப்பதாக கூறியுள்ளார்.

ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ்

ஆனால் தாங்கள் கேட்ட தொகை இருந்தால் மட்டுமே பிரசவம் பார்க்கப்படும் என்று கிளினிக் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பின்னர் அடுத்த நாள் அவர் கிளினிக் கேட்ட தொகையுடன் வந்திருக்கிறார். ஆனாலும், அவரை அலைய விட்டிருக்கிறார்கள். பின்னர், சிறிது நேரத்தில் தனது குழந்தை பிறந்தவுடன் இறந்துள்ளது என்பது தெரிய வந்திருக்கிறது. இதை கேட்டதும் அவர் அங்கேயே உடைந்து அழுதிருக்கிறார். பின்னர் தனது குழந்தையை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வேண்டும் என கோரியுள்ளார்.

விசாரணை

விசாரணை

ஆனால் கிளினிக் தரப்பில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டுள்ளது. அவர் எவ்வளவோ கெஞ்சி கேட்டும் ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படவில்லை. இதனையடுத்து தனது மனைவியை அழைத்துக்கொண்டு உயிரிழந்த பச்சிளம் குழந்தையை பைக்கில் உள்ள பெட்டியில் போட்டுக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து புகார் அளித்துள்ளார்." என இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பாரதியின் உறவினர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும், தவறிழைத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

பிரசவத்தின் போது உயிரிழந்த பச்சிளம் குழந்தையை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வழங்க மறுக்கப்பட்டதால் குழந்தையை பைக்கின் பெட்டியில் வைத்து எடுத்து சென்ற சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+