ஆந்திரா தேர்தல்: பாஜகவுடன் கூட்டணி வைக்கும் போட்டியில் வெல்லப் போவது சந்திரபாபு நாயுடு? ஜெகன் அண்ணா?
அமராவது: ஆந்திரா சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு முதல்வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியும் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் முட்டி மோதுவது பரபரப்பான காட்சிகளாக உருவெடுத்துள்ளன.
ஆந்திரா மாநில சட்டசபைக்கு லோக்சபா தேர்தலுடன் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஒய்.எஸ்.ஆர். கட்சியின் தலைவரான முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஏற்கனவே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறார்.

ஜெகன் மோகனுக்கு எதிரான முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனாவுடன் கூட்டணி அமைத்துள்ளார். ஜனசேனாவோ பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இந்த நிலையில் சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப் போவது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸா? தெலுங்குதேசம் கட்சியா? என்பதுதான் ஆந்திராவின் தற்போதைய விவாதம். இந்த மாதத்தின் தொடக்கத்தில் திடீரென டெல்லி சென்றார் சந்திரபாபு நாயுடு. டெல்லியில் அமித்ஷா மற்றும் பாஜக மூத்த தலைவர்களை சந்தித்தார். உடனே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்குதேசம் இணைகிறது என்கிற தகவல் காட்டுத் தீயாக பரவியது.
ஆனால் இந்த சந்திப்புக்கு மறுநாளே டெல்லி போனார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. ஏற்கனவே மத்திய பாஜக அரசுக்கு நாடாளுமன்றத்தில் பல வகைகளிலும் ஆதரவு தருகிறவர்; எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி பக்கமே தலை வைத்து படுக்காதவர். அதனால் ஜெகன் மோகனின் இந்த சந்திப்பும் ஓஹோ, பாஜகவுடன் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கூட்டணி வைக்கப் போகிறதா? என்கிற இன்னொரு செய்தியை உருவாக்கிவிட்டன.
அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியோ, ஆந்திரா மாநில தலைவராக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளாவை நியமித்துவிட கூடுதல் பரபரப்பாகிவிட்டது ஆந்திரா தேர்தல் களம். அண்ணன் ஜெகன் மோகனுக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு சூறாவளியாக ஒய்.எஸ்.ஷர்மிளா சுழன்று கொண்டிருக்கிறார்.
டெல்லி சந்திப்புகளைத் தொடர்ந்து ஆந்திராவின் இரு பெரும் கட்சிகளுமே வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. டெல்லியின் முடிவு அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையை தொடங்கத்தான் இந்த காத்திருப்பாம். யாருக்கு திறக்க காத்திருக்கிறதோ டெல்லி கதவுகள்?
-
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள்











Click it and Unblock the Notifications