எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்- ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
அமராவதி: மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் அனுப்பியுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் எஸ்.பி. பாலசுப்ரமணியம். பின்னர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதில் சிகிச்சை பலனின்றி எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த இசைரசிகர்களை பேரதிர்ச்சிக்கும் பெரும் துயரத்துக்கும் உள்ளாக்கியது. எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் சென்னை அருகே தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை இல்லத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனிடையே எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டு என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இதனை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.













Click it and Unblock the Notifications