தெறிக்கவிட்ட சந்திரபாபு நாயுடு தேர்தல் அறிக்கை! காப்பி அடித்து களமிறக்கியதாக முதல்வர் ஜெகன் சீற்றம்!
கர்நூல்: ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட தேர்தல் அறிக்கையால் அம்மாநில அரசியல் களம் அக்னி வெயிலைப் போல கனன்று கொண்டிருக்கிறது.
ஆந்திரா மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆந்திரா மாநிலத்தில் மொத்தம் 175 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 88 இடங்கள்.
ஆந்திராவைப் பொறுத்தவரை ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் இடையேதான் கடும் போட்டி. காங்கிரஸ், பாஜக, பவண் கல்யாணின் ஜனசேனா, கேசிஆரின் பி.ஆர்.எஸ் மற்றும் இடதுசாரிகளும் ஆந்திரா தேர்தல் களத்தில் உள்ளன.

ஆந்திரா தேர்தலுக்கு ஓராண்டு இருக்கும் நிலையில் அம்மாநில அரசியலில் பெரும் புயலை வீச செய்துள்ளார் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்திரபாபு, ஆந்திரா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 நிதி உதவி; இளம் பெண்களுக்கு மாதம் ரூ1,500; அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,000, வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ.3,000 நிதி உதவி என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றிருந்தன. அத்துடன் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டு தேர்தல் அறிக்கையின் 2-ம் பாகமும் விரைவில் வெளியிடப்படும் என கூறியிருந்தார் சந்திரபாபு நாயுடு.
சந்திரபாபு நாயுடுவின் தேர்தல் அறிக்கைக்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டி கூறுகையில், சந்திரபாபு நாயுடு வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஆந்திராவில் தயாரானது அல்ல. அந்த அறிக்கை ஒரு கலவை சாதம். கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக வெளியிட்ட வாக்குறுதிகளை காப்பி அடித்து தயாரிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநில சட்டசபை தேர்தலானது யுத்த களமாக இருக்கும். பொதுமக்களுக்கு நிதி உதவியை வங்கி கணக்கில் செலுத்துகிற அரசு வேண்டுமா? அரசு பணத்தை சூறையாடுகிறவர்கள் வேண்டுமா? என்பதை ஆந்திரா மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications