நள்ளிரவில் வந்த பார்சல்.. திறந்து பார்த்தால் உள்ளே ஆணின் சடலம்.. அலறிய ஆந்திரா.. பகீர் சம்பவம்
அமராவதி: ஆந்திராவில் மின்சாதன பொருட்கள் என்று கூறி இளைஞர் ஒருவரின் சடலம் அடங்கிய பார்சல் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பார்சலுடன் ரூ. 1.30 கோடி பணம் கேட்டு மிரட்டல் லெட்டரும் இருந்த நிலையில், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இப்போதெல்லாம் ஆன்லைன் டெலிவரிகளில் நாம் எதிர்பார்க்காத பல பொருட்கள் வருவது ஆங்காங்கே நடந்து வருகிறது. ஆனால், இங்கே பெண் ஒருவருக்கு உயிரிழந்த நபரின் சடலம் வந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் பார்சலில் வந்த சடலம்:
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆன்லைன் டெலிவரியில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் இருக்கும் பார்சல் வந்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் மேற்கு கோதாவரி மாவட்டம் உண்டி என்ற ஊரில் உள்ள யெண்டகண்டி கிராமத்தில் நடந்துள்ளது.
அந்த பகுதியில் வசிக்கும் நாக துளசி என்ற பெண் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். அவர் வீடு கட்ட நிதி உதவி கோரி க்ஷத்ரிய சேவா சமிதியிடம் விண்ணப்பித்து இருந்தார்.. அவரது விண்ணப்பத்தை ஏற்றுக் கோரி க்ஷத்ரிய சேவா சமிதி என்ற அமைப்பில் இருந்து முதலில் அந்த பெண்ணுக்கு டைல்ஸ் கற்கள் அனுப்பப்பட்டன.
ஆண் சடலம்:
அந்த பெண் மீண்டும் வீடு கட்ட உதவி வேண்டும் என்ற கோரிக்கையுடன் க்ஷத்ரிய சேவா சமிதியிடம் உதவி கோரினார். இந்த முறை வீட்டிற்குத் தேவையான மின்சாதனங்களை வழங்குவதாகச் சமிதி உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. மின்விளக்குகள், மின்விசிறிகள், சுவிட்சுகள் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என்ற மெசேஜ் வாட்ஸ்அப்பில் அந்த பெண்ணுக்கு வந்துள்ளது.
அதன்படி நேற்று வியாழக்கிழமை இரவு அந்த பெண்ணுக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. அதில் மின்சாதனங்கள் இருப்பதாகச் சொல்லி, டெலிவரி ஏஜெண்டு அந்த பார்சலை வீட்டு வாசலில் வைத்துச் சென்று இருக்கிறார். இருப்பினும், பார்சலை சிறந்த பார்த்த போது துளசிக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதில் உயிரிழந்த நிலையில், ஒருவரின் சடலம் இருந்ததைப் பார்த்து துளசி அதிர்ச்சியின் உச்சத்திற்குப் போய்விட்டார்.
மிரட்டல்:
அவரது குடும்ப உறுப்பினர்களும் இதைப் பார்த்து பீதி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அத்னான் நயீம் அஸ்மி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று இருக்கிறார்.
முதற்கட்ட தகவல்
போலீசார் நேரில் சென்று ஆய்வு செய்த போது அந்த பார்சலில் லெட்டர் ஒன்றும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக ரூ. 1.30 கோடி தங்களுக்குத் தர வேண்டும் என்றும் இல்லையென்றால் குடும்பத்தினர் மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அதில் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. முதற்கட்டமாக அந்த பார்சலை டெலிவரி செய்த நபரை போலீசார் அடையாளம் காண முயன்று வருகிறார்கள். இந்தச் சம்பவம் குறித்து க்ஷத்ரிய சேவா சமிதியின் பிரதிநிதிகளையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
போலீஸ் விசாரணையில் அது சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் என்பது தெரிய வந்துள்ளது. அந்த நபர் 4-5 நாட்களுக்கு முன்பு உயிரிழந்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இப்போது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னரே, அந்த நபர் கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications