'லோக்பால்' கோரி மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கினார் அன்னா ஹசாரே
Subscribe to Oneindia Tamil

வலுவான லோக்பால் மசோதாவை அமைக்க வேண்டும் என்பது அன்னா ஹசாரேவின் நீண்ட நாள் கோரிக்கை. இதற்காக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டங்களை ஏற்கெனவே நடத்தியுள்ளார் அன்னா ஹசாரே.
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே வலுவான லோக்பால் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற என்றும் அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார். தமது கோரிக்கையை வலியுறுத்தி இன்று தமது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் தொடங்கியுள்ளார்.
ஹசாரேவுடன் அவரது ஆதரவாளர்களும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications