For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தைரியமா இருங்க.. நாங்க இருக்கோம்.. உயிரை உலுக்கும் ஒரு அருமையான படம்!

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர் : நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் இறுதி மரியாதையின் போது, அவரது தந்தைக்கு சக ராணுவ வீரர் கண்ணீர் மல்க ஆறுதல் கூறும் புகைப்படம் பார்பவர்களின் மனதை உருக்கும் விதமாக உள்ளது.

ஜம்மு & காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையின் போது வீர மரணம் அடைந்த ராணுவ வீரர், லான்ஸ் நிக் நசீர் அகமது வானியின் தந்தைக்கு சக வீரர்கள் கட்டித் தழுவி ஆறுதல் கூறினர். அப்போது, "நீங்கள் தனி ஆள் இல்லை" என்று கூறி தைரியப்படுத்தினர்.

army officer died while on duty has left many teary eyed

இந்த புகைபடத்தை ராணுவத்தின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். இதனை கண்ட ராணுவ வீரர்கள் மற்றும் பலர் தங்களது வீர வணக்கத்தை தெரிவித்துள்ளனர். மேலும், இந்த புகைப்படம் இந்திய அளவில் டிரெண்டிங் ஆனாது.

6 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற 38 வயதான ராணுவ வீரர் லான்ஸ் நிகர் நசீர் அகமது, இரண்டு முறை சேனா பதக்கம் பெற்றுள்ளார். இவர் கடந்த 2004 ம் ஆண்டு ராணுவத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த மகனை இழந்து வாடும் தந்தைக்கு ஆறுதல் கூறும் விதமாகவும், ராணுவ வீரர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் பலர் ட்வீட்டரில் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

English summary
During the final honor of the soldier who died in heroic death, soldier has left people teary eyes
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X