இந்திய ராணுவத்தில் புரட்சி – விரைவில் “கமாண்ட் பட்டாலியன்களுக்குத்” தலைமை ஏற்கப் போகும் பெண்கள்!

அதாவது ராணுவத்தின் முக்கியப் பிரிவுகளில் பெண்களுக்கும் தலைமை தாங்கும் பொறுப்பை அளிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஒரு அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.
பெண்களுக்கு பயிற்சி:
அதன்படி 2015-16 இல் ராணுவத்தில் சேரும் பெண் அதிகாரிகளுக்குப் படைப் பிரிவுகளுக்குத் தலைமை தாங்குவதற்கான பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படவுள்ளது.
ஆண்களுக்கு சமமாகும் பெண்கள்:
மேலும் எதிர்காலத்தில் ஆண் அதிகாரிகளுக்கு சமமாக பெண் அதிகாரிகளும் படைப் பிரிவுகளுக்குத் தலைமை தாங்கும் தகுதி பெறுவார்கள்.
முதல்கட்ட பிரிவுகள்:
முதல் கட்டமாக ஏவியேஷன், பொறியியல் பிரிவு, சிக்னலிங் போன்ற பிரவுகளில் பட்டாலியன்களுக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு பெண் அதிகாரிகளுக்குக் கிடைக்கும்
தளர்வுகள் உண்டு:
அதேசமயம் உடல் கூறு தகுதியில் பெண் அதிகாரிகளுக்கு சில தளர்வுகள் அளிக்கப்படும். அதேசமயம், ஆண் அதிகாரிகளுக்குத் தரப்படும் அதே அளவிலான பயிற்சியே பெண்களுக்கும் தரப்படும். அதில் தளர்வு இருக்காது.
புதிய முயற்சி:
இதுவரை ராணுவத்தில் படைப் பிரிவுகளுக்குத் தலைமை தாங்குவது ஆண் அதிகாரிகள் மட்டுமே. பெண் அதிகாரிகள் யாரும் கமாண்ட் தகுதியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆயுதப் பிரிவு அல்லாத பிரிவுகளில் மட்டுமே பெண் அதிகாரிகளுக்குத் தற்போது தலைமை தாங்கும் அனுமதி உள்ளது.
சாதனைப் பெண்கள்:
1990 ஆம் ஆண்டுதான் பெண் அதிகாரிகள் ராணுவத்தில் முதல் முறையாக சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்களுக்கு சட்டப் பிரிவு, சப்ளை மற்றும் ஆயுத கிட்டங்கி ஆகிய பிரிவுகளில்தான் முக்கியப் பொறுப்புக் வழங்கப்படுகின்றன. அதேசமயம் சுதந்திரத்திற்கு முன்பிருந்து மருத்துவப் பிரிவிலும் பெண்கள் அனுமதிக்கப்பட்டு வந்துள்ளனர்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications