காங்கிரசுடன் ஒப்பந்தமா? கட்காரியின் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது: கெஜ்ரிவால் பாய்ச்சல்
டெல்லி: காங்கிரசுடன் எந்த ஒப்பந்தமும் போடவில்லை, நாங்கள் மக்கள் பணியாற்றவே வந்துள்ளோம் என பாஜக தலைவர் கட்காரியின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லியில் பா.ஜ.க ஆட்சி அமைப்பதை தடுக்கும் நோக்கத்திலேயே காங்கிரசும், ஆம் ஆத்மியும் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் பிரபல தொழிலதிபர் மூலம் இந்த ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் பரபரப்புக் குற்றச்சாட்டைக் கூறியிருந்தார் பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரி.

காங்கிரசுடன் ஆம் ஆத்மி ஒப்பந்தம் என்ற கட்காரியின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால். இது குறித்து அவர் கூறுகையில் :-
இந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை. மூத்த தலைவர் கட்காரி இவ்வாறு முட்டாள்தனமாக பேசுவது கவலை அளிக்கிறது. அவர் குற்றச்சாட்டு கூறுவதானால், அதற்கான ஆதாரத்தையும் வெளியிட வேண்டும்.
காங்கிரசுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் எந்த ஒரு ஒப்பந்தமும் ஏற்படவில்லை. நாங்கள் மக்களுக்கு பணியாற்றுவதற்காக இங்கு வந்திருக்கிறோம். டெல்லி சட்டசபையில் நடக்கும் தேர்வில் வெற்றி பெற்றால், தொடர்ந்து ஆட்சி நடத்துவோம். இல்லாவிட்டால் மீண்டும் மக்களிடம் செல்வோம்" என இவ்வறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications