உடைகிறது ஆம் ஆத்மி? - கெஜ்ரிவாலை நீக்க முயற்சி: டெல்லியில் பரபரப்பு
டெல்லி: தனிநபர் ஒருவரைச் சுற்றியே கட்சி வளர்கிறதோ என ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களான பிரசாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதிய விவகாரம் வெடித்த பின்னணியில் தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்க முயற்சிகள் நடப்பது தெரிய வந்துள்ளது. இதனால் கட்சி உடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, அங்கு மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. முதல் முறை சொதப்பினாலும் கூட அதை மறந்து, மன்னித்து 2வது வாய்ப்பு டெல்லிமக்கள் ஆம் ஆத்மிக்குக் கொடுத்துள்ளனர். அதை உணர்ந்து, ஆட்சியில் அமர்ந்ததும் தான் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது அக்கட்சி.

இந்நிலையில், கடந்த 6ம் தேதி அக்கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கட்சிக்குள் முன்னணி தலைவர்கள் பலர் தங்களது அதிருப்திகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி தலைவர்களான பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர், கெஜ்ரிவாலுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளனர்.
அதில், அவர்கள் " நமக்காக உழைத்த தொண்டர்கள் தான் கட்சியின் வெற்றிக்கு காரணம். ஆனால் அவர்களுக்கு தர வேண்டிய பாராட்டை நாம் தரவில்லை. மீண்டும் ஒரு தனி நபரை சுற்றியே நமது கட்சியும் வளர்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கட்சிக்கு சந்தேகத்திற்கிடமான நான்கு கம்பெனிகளிடம் இருந்து பெறப்பட்ட தலா 5 லட்சம் ரூபாய்க்கு என்ன கணக்கு இருக்கிறது. 10 லட்சத்திற்கும் மேல் கிடைக்கும் நிதியை யார் அனுப்பினாலும், அவர்கள் நேர்மையானவர்கள் தானா என விசாரிக்க வேண்டும். ஆனால் 20 லட்சம் ரூபாய் பெறப்பட்ட விஷயத்தில் நாம் சரியாக விசாரிக்கவில்லையோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது'' என குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக டெல்லி சட்டசபை தேர்தல் வேட்பாளர் தேர்விலும் தங்கள் அதிருப்தியை இத்தலைவர்கள் வெளிப்படுத்தினர். 12 வேட்பாளர்களுக்கு கிரிமினில் பின்னணி இருப்பதாக ஒரு பட்டியலை பூஷண் அளித்தார். இதில் இருந்து 2 பேர் மட்டுமே நீக்கப்பட்டனர். இதுவும் பூஷணுக்கு வெறுப்பை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் யோகேந்திர யாதவ் இன்று போட்டுள்ள ஒரு டிவிட்டில், ‘சிறுபிள்ளைத்தனமான அரசியல் நமது மாபெரும் பணிகளுக்கு குறுக்கே வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்று கோரியிருந்தார். கடிதமும் எழுதி விட்டு, இப்படியும் அவர் டிவிட் போட்டுள்ளது குழப்புவதாக உள்ளது. யாதவ் மற்றும் பூஷண் கடிதங்களுக்கு கட்சி மேலிடம் இதுவரை பதில் அனுப்பவில்லையாம்.
கெஜ்ரிவாலை நீக்க முயற்சி
இந்த நிலையில் கட்சித் தலைவர் பதவியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்க முயற்சிகள் நடந்து வருகிறதாம். இதுதொடர்பாக நாளை டெல்லியில் கூடும் கட்சித் தலைவர்கல் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவுள்ளதாம். அப்படி நடந்தால் கட்சி உடையும் என்கிறார்கள்.
மேலும் பிரஷான்த் பூஷணும், யோகேந்திர யாதவும்தான் கெஜ்ரிவாலை நீக்கும் நடவடிக்கைகளுக்கு பின்னால் உள்ளனராம். இந்த நிலையில் கெஜ்ரிவாலை நீக்க முயற்சிகள் நடப்பதை கட்சி செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங்கும் ஒத்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து சிங் கூறுகையில், " சிலர் கட்சியை கேலிக்கூத்தாக்கி விட்டனர். மூத்த தலைவர்கள் சிலர் கெஜ்ரிவாலை நீக்க முயல்கின்றனர். அப்படி நடந்தால் கட்சியை எப்படி நடத்துவது என்பது குறித்து தேசிய செயற்குழுவைக் கூட்டி விவாதிப்போம் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications