அஸ்ஸாம் சட்டசபைத் தேர்தல்..புதிய கூட்டணி வியூகம்..2021-ம் ஆண்டிலாவது உயிர்ப்புடன் மீளுமா காங்கிரஸ்?
குவஹாத்தி: அஸ்ஸாம் சட்டசபை தேர்தலை புதிய மெகா கூட்டணி வியூகத்துடன் எதிர்கொள்கிறது காங்கிரஸ். இந்த வியூகத்தின் மூலமாக 2021-ம் ஆண்டிலாவது உயிர்ப்புடன் மீள்வோம் என்கிற நம்பிக்கையில் இருக்கிறது காங்கிரஸ்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் சட்டசபைகளுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் கேரளா, அஸ்ஸாம் மாநிலங்கள் மட்டுமே காங்கிரஸ் தனித்து வெல்ல முடியும் என்கிற நம்பிக்கை உள்ள மாநிலங்கள்.
தமிழகம், புதுவையில் திமுகவுடன் கூட்டணியை நம்பித்தான் காங்கிரஸ் உள்ளது. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள், காங்கிரஸ் கூட்டணி 3-வது அணியாகத்தான் உள்ளது. கேரளாவில் ஆளும் இடதுமுன்னணிக்கு சவாலாக உள்ளது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி. அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு இந்த நம்பிக்கையை வலுவாக்கி இருக்கிறது.

அஸ்ஸாமில் அமித்ஷா
அஸ்ஸாமில் பாஜகவிடம் பறிகொடுத்த அதிகாரத்தை மீண்டும் எப்படியாவது கைப்பற்றியாக வேண்டும் என்கிற முனைப்பில் உள்ளது காங்கிரஸ். அம்மாநிலத்தில் பாஜக என்பதே காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளில் இருந்து தாவிய தலைவர்களைக் கொண்ட கட்சியாகவே இருக்கிறது. இன்னமும் பாஜகவின், காங்கிரஸ் வேட்டை ஓயவில்லை. அடுத்த சில நாட்களில் பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா அஸ்ஸாம் செல்ல இருக்கிறார். அப்போது காங்கிரஸ் கட்சியின் சில எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளனர்.

புதிய கூட்டணி
இருந்தபோதும் இம்முறை அஸ்ஸாமில் காங்கிரஸ் ஒருவித நம்பிக்கையுடன் களத்தில் நிற்பதற்கு காரணமே அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி எனும் AIUDF தான். கடந்த காலங்களில் இந்த ஐக்கிய முன்னணியை உதாசீனப்படுத்தியதும் காங்கிரஸ்தான். ஆனால் இஸ்லாமியர் வாக்குகளைத் தக்க வைக்க வேறுவழியே இல்லாமல் இந்த முன்னணியின் கையை இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ்.

அஸ்ஸாம் சிறுபான்மை ஓட்டுகள்
அதுவும் மத்திய பாஜக அரசின் குடியுரிமை சட்ட திருத்த விவகாரம் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களிடத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொந்தளிப்பை வாக்குகளாக அறுவடை செய்ய வேண்டும் என்பதில் ஐக்கிய முன்னணியும் காங்கிரஸும் உறுதியாக உள்ளன. அத்துடன் பாஜகவுக்கு எதிரான அத்தனை மாநில கட்சிகளையும் ஒருங்கிணைத்து மெகா கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்வதுதான் காங்கிரஸ், ஏஐயூடிஎப்-ன் வியூகம்.

நம்பிக்கை
ஒவ்வொரு மாநிலத்திலும் மரண அடியை வாங்கி வரும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த வியூகம் நம்பிக்கையைத் தந்திருக்கிறது. பிறக்கப் போகும் 2021-ம் ஆண்டிலாவது எழுச்சியை மீளப் பெற முடியும் என்கிற நம்பிக்கையுடன் காங்கிரஸ் அஸ்ஸாம் தேர்தலை மலைபோல் நம்பி காத்திருக்கிறது.
-
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications