Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐஐடி குஹாத்தி மாணவர் ஹாஸ்டல் அறையில் சடலமாக மீட்பு.. மிகப்பெரிய போராட்டம்.. அஸ்ஸாமில் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள ஐஐடியில் (அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம்) உள்ள விடுதி அறையில் 21 வயது மாணவர் (ஐஐடி-ஜி) இறந்து கிடந்தார். இந்த மாணவருடன் சேர்த்து இதுவரை 4 மாணவர்கள் இறந்துள்ளனர். இதை கண்டு கொதித்து போன மாணவர்கள் மிகப்பெரிய போராட்டத்தில் இறங்கி உள்ளனர். ஐஐடி குவஹாத்தியில் மாணவர் போராட்டத்தால் பதற்றமான நிலை நீடிக்கிறது.

அஸ்ஸாம் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான குவஹாத்தியில் ஐஐடி செயல்படுகிறது.. புகழ் பெற்ற கல்வி நிறுவனமான இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் படித்து வருகிறார்கள். மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு தனித்தனியாக ஹாஸ்டல் வசதி உள்ளது.

Assam student iit

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனமான குவஹாத்தி ஐஐடியில் மாணவர்கள் அடிக்கடி உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த சம்பவம் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடையே வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில், 3ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வரும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது மாணவர் நேற்று ஐஐடி குவஹாத்தியில் உள்ள விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர்கள் பெரும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குவஹாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இந்த மரணம் எப்படி நடந்தது, இதன் பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மாணவர்களின் தீவிரமான முற்றுகை போராட்டத்திற்கு மத்தியில் விளக்கம் அளித்துள்ள ஐஐடி குவஹாத்தி நிர்வாகம், எங்கள் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவரை இழந்துவிட்டோம். இதுபற்றி புகார் அளிக்கையில், மிகவும் வருத்தமாக உள்ளது. இந்த கடினமான நேரத்தில் மாணவரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஐஐடி குவஹாத்தியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஆதரவான மற்றும் பாதுகாப்பான சூழலை அதிகரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இது போன்ற நெருக்கடியான நேரங்களில், மாணவர்கள் மன ரீதியாக பலவீனமடைவதை தடுக்கவும், அவர்களின் நல் வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கவும், ஐஐடி குவஹாத்தி அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சி அமைப்புகள் இந்த விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளதால் பதற்றமான நிலை நீடிக்கிறது. கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி, 24 வயதான எம்டெக் மாணவியும் அவரது விடுதி அறையில் இறந்து கிடந்தார். இதுவரை இந்த ஆண்டு மட்டும் 4 மாணவர்கள் ஐஐடி குவஹாத்தியில் இறந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+