சட்டசபை தேர்தல் வாக்கு பதிவு நிறைவு: மேகாலயா, நாகாலாந்தில் 67%
மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
ஷில்லாங்/கோஹிமா: வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 3 மணிக்கு முடிந்தது.
தலா 60 சட்டசபை தொகுதிகளை கொண்ட மாநிலங்களான மேகாலயா மற்றும் ஷில்லாங்கில் தலா 59 தொகுதிகளுக்கு மட்டும் இன்று தேர்தல் நடைபெற்றது.
இந்த இரு மாநிலங்களில் மேகாலயாவில் இதுவரை பாஜக ஆட்சிக்கு வந்ததில்லை. எனவே இந்த முறை ஆட்சியை பிடித்து விட்டால் முதல் முறையாக பாஜக ஆட்சி என்ற பெருமை கிடைக்கும். ஆனால் நாகாலாந்தில் அங்குள்ள மாநில கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக ஆட்சியில் ஒட்டிக் கோண்டது.

வாக்கு பதிவு
தற்போதும் அதே பாணியில் மற்றொரு மாநில கட்சியுடன் பாஜக தேர்தலை சந்தித்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியுடன் போட்டி போட்டிக் கொண்டு பாஜக பிரசாரம் செய்தது, இரு மாநிலங்களிலும் கடந்த 25-ஆம் தேதியுடன் பிரசாரங்கள் ஓய்ந்தன. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 3 மணிக்கு முடிவடைந்தது.

துப்பாக்கிச் சூடு
மேகாலயா, நாகாலாந்தில் தலா 67 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. நாகாலாந்து வாக்கு பதிவின்போது ஏற்பட்ட வன்முறையில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.

பெண் வேட்பாளர்கள்
திரிபுரா மற்றும் மேற்கண்ட இரு மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. நாகாலாந்தில் முதல் முறையாக பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

முட்டி மோதும் பாஜக
மேகாலயாவில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இரு மாநிலங்களிலும் தங்கள் தடத்தை பதிக்க பாஜக முட்டி மோதியது.












Click it and Unblock the Notifications