சட்டசபை தேர்தல் நடைபெறும் உத்தரகாண்ட் மாநிலத்தில் 23 திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
டேராடூன்: சட்டசபை தேர்தல் நடைபெறும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூ17,500 கோடி மதிப்பிலான 23 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும் தொடங்கியும் வைக்க உள்ளார்.
உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஜனவரி முதல் வாரத்தில் தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதேநேரத்தில் ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. அப்படி ஓமிக்ரான் பரவலுக்கு மத்தியில் 5 மாநில தேர்தல்கள் நடந்தால் அரசியல் கட்சிகள் ஆன்லைனில் பிரசாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. ஆனால் பாஜகவின் நிலவும் உட்கட்சி பூசல் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. 5 ஆண்டுகளில் 3 முதல்வர்களை நியமித்திருக்கிறது பாஜக. இதனால் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான அலை இம்மாநிலத்தில் உள்ளது. இதனை காங்கிரஸ் கட்சியால் எளிதாக அறுவடை செய்துவிட முடியும் என்பது கள யதார்த்தம்.
ஆனால் காங்கிரஸ் கட்சியிலும் கோஷ்டி பூசல் வெடித்திருக்கிறது. முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், முதல்வர் வேட்பாளராக தம்மை முன்னிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். காங்கிரஸ் மேலிடத்தின் மிகவும் நம்பிக்கைக்குரியவரான ஹரீஷ் ராவத்தின் இந்த கலகக் குரல் அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதனிடையே உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூ17,500 கோடி மதிப்பிலான 23 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் தொடங்கி வைக்கவும் பிரதமர் மோடி அம்மாநிலத்துக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பிரதமர் மோடி டிசம்பர் 30-ந் தேதி உத்தரகாண்ட் மாநில பயணம் மேற்கொள்கிறார். உத்தரகாண்ட் மாநிலத்துடன் உத்தரப்பிரதேசத்துக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அம்மாநிலத்திலும் இதேபோல் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார் பிரதமர் மோடி.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications