அடுத்த லெவலுக்கு மாறுகிறது ம.பி. அரசு... ஏடிஎம் மூலம் மருந்து தர திட்டம்
போபால்: இலவச மருந்து விநியோகத் திட்டத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்கிறது மத்தியப் பிரதேச அரசு. விரைவில் அரசு மருத்துவமனைகளில் மருந்துகளை ஏடிஎம் இயந்திரம் மூலம் விநியோகிக்க அது திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான திட்டத்தையும் அது பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து அரசு மருத்துவமனைப் பராரிப்பு பொறுப்பில் இருக்கும் மாநில அரசின் சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் கேக் தாசு கூறுகையில், 'இதுதொடர்பான பைலட் திட்டம் பேதுல் மாவட்டத்தில் உள்ள ஐந்து ஊரக சுகாதார மையங்களில் நடத்தப்படும்.
ஜூலை மாதமே இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும். அதன் வெற்றியைப் பொறுத்து மாநிலம் முழுவதும் இது பின்னர் விரிவுபடுத்தப்படும்' என்கிறார்.

முதல்கட்ட பரிசோதனை...
மேலும், இந்தத் திட்டம் எப்படி செயல்படும் என்பது குறித்து தாசு கூறுகையில், ‘ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிக்கு முதலில் ஒரு சுகாதார ஊழியர் பிபி, ரத்த சர்க்கரை அளவு ஆகியவற்றை செக் செய்வார்.

மருந்து ஏடிஎம்...
பின்னர் டெலிமெடிசின் டாக்டருக்கு அவர் பரிந்துரைக்கப்படுவார். டாக்டர் நோயாளியுடன் பேசிய பின்னர் என்ன மருந்து தர வேண்டும் என்பதை ஏடிஎம் மெஷினுக்கு அறிவுறுத்துவார். அதன்படி அந்த மருந்தை மெஷின் நோயாளிக்குத் தரும்' எனத் தெரிவித்துள்ளார்.

வரப்பிரசாதம்...
ஊரகப் பகுதிகளில் டாக்டர்கள் இல்லாத இடங்களில் இந்தத் திட்டம் மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்பதால் இந்தத் திட்டம் நிச்சயம் வெற்றி அடையும் என்று மத்தியப் பிரதேச அரசு நம்புகிறது.

மருத்துவமனைகள்...
மத்திய பிரதேசத்தில் தற்போது 8764 துணை சுகாதார மையங்கள், 1157 ஆரம்ப சுகாதார மையங்கள், 334 கம்யூனிட்டி சுகாதார மையங்கள் உள்ளன.

டாக்டர்களே இல்லை...
இதில் 600 ஆரம்ப சுகாதார மையங்களில் டாக்டர்கள் கிடையாது. ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். மேலும் 2 டஜன் கம்யூனிட்டி சுகாதார மையங்களில் டாக்டரே நியமிக்கப்படவில்லையாம்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications