அடுத்த லெவலுக்கு மாறுகிறது ம.பி. அரசு... ஏடிஎம் மூலம் மருந்து தர திட்டம்
போபால்: இலவச மருந்து விநியோகத் திட்டத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்கிறது மத்தியப் பிரதேச அரசு. விரைவில் அரசு மருத்துவமனைகளில் மருந்துகளை ஏடிஎம் இயந்திரம் மூலம் விநியோகிக்க அது திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான திட்டத்தையும் அது பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து அரசு மருத்துவமனைப் பராரிப்பு பொறுப்பில் இருக்கும் மாநில அரசின் சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் கேக் தாசு கூறுகையில், 'இதுதொடர்பான பைலட் திட்டம் பேதுல் மாவட்டத்தில் உள்ள ஐந்து ஊரக சுகாதார மையங்களில் நடத்தப்படும்.
ஜூலை மாதமே இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும். அதன் வெற்றியைப் பொறுத்து மாநிலம் முழுவதும் இது பின்னர் விரிவுபடுத்தப்படும்' என்கிறார்.

முதல்கட்ட பரிசோதனை...
மேலும், இந்தத் திட்டம் எப்படி செயல்படும் என்பது குறித்து தாசு கூறுகையில், ‘ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிக்கு முதலில் ஒரு சுகாதார ஊழியர் பிபி, ரத்த சர்க்கரை அளவு ஆகியவற்றை செக் செய்வார்.

மருந்து ஏடிஎம்...
பின்னர் டெலிமெடிசின் டாக்டருக்கு அவர் பரிந்துரைக்கப்படுவார். டாக்டர் நோயாளியுடன் பேசிய பின்னர் என்ன மருந்து தர வேண்டும் என்பதை ஏடிஎம் மெஷினுக்கு அறிவுறுத்துவார். அதன்படி அந்த மருந்தை மெஷின் நோயாளிக்குத் தரும்' எனத் தெரிவித்துள்ளார்.

வரப்பிரசாதம்...
ஊரகப் பகுதிகளில் டாக்டர்கள் இல்லாத இடங்களில் இந்தத் திட்டம் மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்பதால் இந்தத் திட்டம் நிச்சயம் வெற்றி அடையும் என்று மத்தியப் பிரதேச அரசு நம்புகிறது.

மருத்துவமனைகள்...
மத்திய பிரதேசத்தில் தற்போது 8764 துணை சுகாதார மையங்கள், 1157 ஆரம்ப சுகாதார மையங்கள், 334 கம்யூனிட்டி சுகாதார மையங்கள் உள்ளன.

டாக்டர்களே இல்லை...
இதில் 600 ஆரம்ப சுகாதார மையங்களில் டாக்டர்கள் கிடையாது. ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். மேலும் 2 டஜன் கம்யூனிட்டி சுகாதார மையங்களில் டாக்டரே நியமிக்கப்படவில்லையாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications