பெங்களூர் ஏ.டி.எம். கொள்ளையன் ஒரு சைக்கோ: மக்களே உஷார்- போலீசார் எச்சரிக்கை

பெங்களூரில் உள்ள ஏ.டி.எம். மையம் ஒன்றில் கடந்த 19ம் தேதி பணம் எடுக்கச் சென்ற ஜோதி உதய்குமார்(38) என்ற வங்கி அதிகாரியை மர்ம நபர் ஒருவர் தாக்கி அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றார். இந்நிலையில் ஜோதியின் செல்போனை அந்த நபரிடம் இருந்து வாங்கியவர் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள இந்துபூரில் கைது செய்யப்பட்டார்.
அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கதிரியில் பொதுத் துறை வங்கி ஒன்று தங்களின் ஏ.டி.எம். மையத்தில் கடந்த 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பணம் எடுத்த நபர் ஜோதியை தாக்கிய நபர் போன்று இருப்பதாக சிசிடிவி வீடியோவில் பதிவானதை பார்த்துவிட்டு தெரிவித்தது. அந்த நபர் அனந்தபூர் மாவட்டம் தர்மாவரத்தைச் சேர்ந்த மூதாட்டியை கொன்றுவிட்டு அவரது மகனின் ஏ.டி.எம். கார்டை பறித்து பணம் எடுத்துள்ளார் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து பெங்களூர் தனிப்படை போலீசார் அனந்தபூர் மாவட்டத்தில் அந்த நபரை வலை வீசித் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் பெங்களூரில் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
மர்ம நபர் போலீசார் தன்னை தேடுவதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. அவர் இரண்டு தாக்குதல்களின்போதும் ஒரே சட்டையை அணிந்திருப்பது தன்னை யாரும் அடையாளம் கண்டுவிடுவார்களோ என்ற பயம் இல்லாததையே காட்டுகிறது. பொதுமக்கள் அந்த நபரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர் ஒரு சைக்கோ போன்று தெரிகிறார்.
அதிகாலை அல்லது இரவு நேரத்தில் தனியாக வரும் பெண்களையே அவர் குறி வைத்து தாக்குகிறார் என்றார்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்











Click it and Unblock the Notifications