For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூரில் பெண்கள் கழிவறைக்குள் புகுந்த 18வயது வாலிபருக்கு தர்ம அடி

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: பெண்கள் கழிவறைக்குள் சென்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. பெங்களூர் மடிவாளா மார்க்கெட் பகுதியை ஒட்டி பெண்களுக்கான பொது கழிவறை உள்ளது. சம்பவத்தன்று, பெண்கள் சிலர் கழிவறைக்குள் சென்ற நேரத்தில், சித்தார்த்நகர் குடிசை பகுதியை சேர்ந்த ரமேஷ் என்ற 18 வயது வாலிபர், திடீரென கழிவறைக்குள் நுழைந்துவிட்டார்.

கூச்சலிட்ட பெண்கள்

திடீரென ஒரு ஆணை பார்த்த அதிர்ச்சியில் உள்ளேயிருந்த பெண்கள் கத்தி கூச்சலிட்டனர். இதையடுத்து அக்கம்பக்கத்தில் சென்றவர்கள் விரட்டி சென்று ரமேஷை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.

கைது செய்த போலீசார்

தகவல் அறிந்து மடிவாளா போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை கைது செய்தனர்.

சார்.. நான் பிக்பாக்கெட் சார்..

விசாரணையில், பிக்பாக்கெட் அடித்துவிட்டு தப்பியோடும்போது தெரியாமல், பெண்கள் கழிவறைக்குள் புகுந்துவிட்டதாக ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இவருக்கு இதே வேலையாமே..

ஆனால் அப்பகுதி பெண்களோ, ரமேஷுக்கு பெண்கள் கழிவறையை எட்டிபார்ப்பது அன்றாட வாடிக்கை என்று குற்றம்சாட்டுகிறார்கள்.

ஆபாச வார்த்தைகள்

கழிவறைக்கு செல்லும் பெண்களை பார்த்து நானும் உள்ளே வரட்டுமா என்பது போன்ற ஆபாச வார்த்தைகளை பேசி ரமேஷும் அவரது நண்பர்கள் மூன்றுபேரும் கேலி செய்வது வழக்கம் என்று பெண்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

English summary
A teenager was tied to a pole and thrashed by locals on Sunday for allegedly barging into a public toilet for women in Siddhartha Nagar, Madiwala, southeast Bangalore. Police said the youth was guilty of a robbery attempt, and arrested him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X