முதல்ல ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலை பத்தி விடுங்க...வங்கி ஊழியர் சம்மேளனம் போர்க்கொடி!
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மும்பை: செல்லாத ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் எந்த ஒரு முன்னேற்பாடும் செய்யாமல் குழப்பங்களுக்கு காரணமாக இருந்த ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று அனைத்து வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வலிய்றுத்தியுள்ளது.
நவம்பர் 8-ந் தேதி ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது முதலே ஒட்டுமொத்தமாக இந்திய மக்களின் வாழ்க்கையே பெரும் கேள்விக்குறியாகி இருக்கிறது. நாடு முழுவதும் அசாதாரணமான நிலை நிலவுகிறது.

ஆன்லைன் வர்த்தகங்களில் சுகம் காணுகிற சுகவாசிகள்தான், இதையும் தாங்கிக் கொள்ளுங்கள் என சட்டாம்பிள்ளைத்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.. 10 நாட்களுக்கும் மேலான இயல்பு வாழ்க்கையை வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் அப்பாவி மக்கள் தொலைத்து கிடக்கிறார்கள்.
மத்திய அரசின் இந்த தடலாடி நடவடிக்கை வங்கி ஊழியர்களையும் கடுமையாக பாதித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அனைத்து வங்கி ஊழியர் சம்மேளனத்தின் துணைத் ஹலைவர் தாமஸ் பிராங்கோ கூறியதாவது:
ரூபாய் நோட்டாது செல்லாது விவகாரத்தில் முறையான முன்னேற்பாடுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் மேற்கொள்ளவில்லை. இதற்கு உர்ஜித் படேல்தான் பொறுப்பேற்க வேண்டும். தற்போதைய இந்த சூழலுக்குப் பொறுப்பேற்று உர்ஜித் படேல் ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு பிராங்கோ கூறினார்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications