மணிப்பூரில் பயங்கரம்:நாளை வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் ஜேடியூ வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு
இம்பால்: மணிபூர் சட்டசபை தேர்தலில் நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் அம்மாநில தேர்தலில் போட்டியிடும் ஜேடியூ வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் சட்டசபையில் நாளை 38 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மணிப்பூர் தேர்தலில் பாஜகவை இடதுசாரி ஆயுதம் தாங்கிய குழுக்கள் எதிர்க்கின்றன.
அதேநேரத்தில் மற்றொரு ஆயுதம் தாங்கிய குழுவான குக்கி கூட்டமைப்பு பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் மணிப்பூர் தேர்தல் தற்போது பயங்கரவாதிகள் பிடியில் சிக்கி இருக்கிறது. பாஜகவுக்கு குக்கி இனத்தவர் வாக்களிக்காவிட்டால் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதனிடையே மணிப்பூரில் தேர்தலுக்கு முன்பாக வன்முறை சம்பவங்களும் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. என்.பி.பி. கட்சியின் வேட்பாளரின் தந்தை மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது. நேற்று மாலை வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் ஜேடியூ வேட்பாளர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாங்லிம்பாம் ரோஹித் சிங் என்ற ஜேடியூ வேட்பாளர் மீது நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நிகழ்ந்தது. கஷெட்ரியாகோ சட்டசபை தொகுதியில் ஜேடியூ வேட்பாளராக அவர் போட்டியிடுகிறார். இச்சம்பவத்துக்கு ஜேடியூ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்யாத மேனேஜர்களுக்கு கோடிகளில் போனஸ்.. 173 கோடி சம்பளம் வாங்கும் சிஇஓ -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
அபிஷேக் சர்மா அவுட்.. ரிங்கு சிங் இன்.. அரையிறுதியில் மொத்தமாக மாறப்போகும் இந்திய பிளேயிங் லெவன்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
இத்தோடு விஜய் அரசியல் முடியனும்.. திமுக தீவிரம்.. காங்கிரசிடம் இறங்கிப் போய் கூட்டணி வைத்த ரகசியம்












Click it and Unblock the Notifications