விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி பலாத்காரம்.. சிக்கிய பள்ளி சிறுவர்கள்!
பெங்களூரு: பெங்களூரு அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை, 13 வயதுடைய இரண்டு சிறுவர்கள் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு புறநகர் பகுதியான பன்னரகட்டாவில் 6 வயது சிறுமி ஒருவர், தனது சகோதரனுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது, 13 வயது மதிக்கத் தக்க பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் சிறுமியை நைசாக பேசி ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து சிறுமியை அவர்கள் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதற்கிடையே விளையாடிக் கொண்டிருந்த தங்கையைக் காணவில்லை என அவளது அண்ணன் தேடியுள்ளான். அப்போது சிறுமி பலாத்காரம் செய்யப் படுவதை அறிந்து, ஓடிச் சென்று இது தொடர்பாக தனது தாத்தா பாட்டியிடம் தெரிவித்துள்ளான்.
தகவல் அறிந்து விரைந்து வந்த மக்கள் சிறுமியை மீட்டனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப் பட்டது. மருத்துவப் பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.
அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் இருவரும் சிறுவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
போலீஸ் தேடுதல் வேட்டையில் அடுத்தடுத்து பலாத்காரம் செய்த சிறுவர்கள் கைது செய்யப் பட்டனர்.












Click it and Unblock the Notifications