பெங்களூருவில் ரூ1.37 கோடியுடன் வேன் மாயம்- டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு!
பெங்களூருவில் ரூ1.37 கோடியுடன் வேன் மாயமாகி உள்ளது.
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூருவில் ரூ1.37 கோடியுடன் வங்கிக்கு சொந்தமான வேன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,
பெங்களூருவில் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்புவதற்காக பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து ரூ1.37 கோடியுடன் வேன் ஒன்று புறப்பட்டு சென்றது. ஆனால் குறிப்பிட்ட ஏடிஎம் மையங்களுக்கு அந்த வேன் செல்லாமல் மாயமாகிவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வேனின் ஓட்டுநர் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர். ரூ1.37 கோடியுடன் டிரைவரே வேனை கடத்திச் சென்றாரா? அல்லது மர்ம நபர்கள் வேனை கடத்தினரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெங்களூருவில் ரூ1.37 கோடியுடன் வேன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications