அந்நியனாக மாறிய அம்பி பெங்களூர்
பெங்களூர்: கோடையிலும் குளு குளு என்று இருந்த பெங்களூரில் அடுத்த சென்னை என்று கூறும் அளவுக்கு தற்போது வெயில் சுட்டெரிக்கிறது.
பெங்களூரில் திரும்பும் பக்கம் எல்லாம் மரம், செடிகள் என்று கண்ணுக்கு குளுமையாகவும், கோடையிலும் வெயிலே தெரியாமலும் இருந்த நாட்கள் வேகமாக மலையேறிக் கொண்டிருக்கிறது. மரங்களை வெட்டி கட்டிடங்கள் கட்டி வருவதின் பலனாக பெங்களூரில் வெயில் சுட்டெரிக்கிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை பெங்களூரில் வெயில் புதிய சாதனை படைத்துள்ளது.

40 டிகிரி
கடந்த செவ்வாய்க்கிழமை பெங்களூரில் வெயில் 40 டிகிரி செல்சியஸாக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வெயிலின் அளவு 5 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. ஒரே ஆண்டில் வெயிலின் அளவு இவ்வளவு அதிகரித்துள்ளது வானிலை ஆய்வு மைய அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பிப்ரவரி
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே பெங்களூரில் வெயில் கொளுத்தி வருகிறது. முன்பு எல்லாம் மார்ச் மாத இறுதியில் தான் பெங்களூரில் கோடை காலம் துவங்கும். ஆனால் தற்போது பிப்ரவரி மாத இறுதியிலேயே கோடை துவங்கிவிட்டது.

மார்ச்
மார்ச் மாதத்தின் முதல் பாதி இரண்டாவது பாதியை விட வெப்பமாக இருந்தது. மார்ச் மாதத்தில் பெங்களூரில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு பெங்களூரில் மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 36.7 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது.

வெயில்
அடுத்த இரண்டு நாட்களுக்கு பெங்களூரில் வெயிலின் தாக்கம் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றில் வெறும் 20 சதவீதமே ஈரப்பதம் இருக்கிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு நகரில் மழையையும் எதிர்பார்க்க முடியாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெக்கை
ஒரே வெக்கையாக உள்ளது, குளித்துவிட்டு குளியல் அறையில் இருந்து வெளியே வந்ததும் வியர்த்துக் கொட்டுகிறது என்று சென்னை மக்கள் கூறுவது வழக்கம். ஆனால் தற்போது இதை பெங்களூர் மக்கள் கூறும் அளவுக்கு வெயில் ருத்ரதாண்டவம் ஆடுகிறது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications