Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போபால் காற்றில் இன்னும் விஷம் – குழந்தைகளைக் கொல்லும் மீத்தைல் ஐசோசயனேட்

Subscribe to Oneindia Tamil

போபால்: போபாலில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விஷவாயு கசிவு 30 ஆண்டுகளுக்கு பின்பும் அங்குள்ள காற்றில் பரவியுள்ள மீத்தைல் ஐசோசயனேட் குழந்தைகளை கொன்று வருவதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது.

போபாலில் உள்ள யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் கடந்த 1984 ஆம் ஆண்டு மீத்தைல் ஐசோசயனேட் என்ற மரணத்தை விளைவிக்கும் விஷவாயு கசிந்து வெளியேறியது.

இச்சம்பவத்தில் 1700 பேர் இறந்ததுடன், 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இவ்விபத்து நடந்து 28 ஆண்டுகளுக்கு பிறகு போபாலில் வசிக்கும் சம்ஷாத் மற்றும் மெமுனா குரேஷி தம்பதிக்கு தாஹா குரேஷி என்ற அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தற்போது 2 வயதாகும் அக்குழந்தைக்கு ரத்த புற்றுநோய் தாக்கியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு காரணம் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் வெளியான விஷவாயு கசிவு தான் என பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பெற்றோர்கள் இருவரும் விஷவாயு கசிவு விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் இக்குற்றச்சாட்டு உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

தங்களது குழந்தையை குணப்படுத்த ரூபாய் 50 லட்சம் செலவாகும் என மருத்துவர்கள் கூறியதாக பெற்றோர் தெரிவித்தனர். இதுவரை 7 லட்ச ரூபாயை செலவழித்துள்ளதாக கூறியுள்ள அவர்கள், விஷவாயு வெளியேற்றத்தால் தான் தங்கள் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பதை அரசு ஒப்புக்கொள்ள மறுப்பதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+