பீகார் தேர்தல்: ரொம்பவே அகம்பாவம் பிடித்த நிதிஷ்குமாரை நம்ப முடியாது... பிரதமர் மோடி கடும் தாக்கு
பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மிகவும் அகம்பாவம் பிடித்தவர்... நம்பிக்கையற்றவர் என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
பீகார் சட்டசபைக்கான தேர்தல் அக்டோபர் 12-ந் தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

பீகாருக்கு ரூ.1.65 லட்சம் கோடி சிறப்பு நிதியை நான் அறிவித்தது தொடர்பாக பலரும் கேள்வியெழுப்புகின்றனர். அது வருமா, வராதா என்கின்றனர். தற்போதைய அரசுக்கு ஒரு ரூபாய் கொடுத்தாலும் அது உங்களை வந்தடையுமா?
அப்படியே நான் கொடுத்தாலும், நிதிஷ் குமாரின் அகம்பாவம் அதனை திருப்பி அனுப்பி விடும். நான் ரூ.1.65 லட்சம் கோடி கொடுத்தால் மோடி கொடுத்ததால் அந்தப் பணம் எனக்குத் தேவையில்லை என அவர் அறிவித்து விடுவார். அவரை நான் நம்ப மாட்டேன்.
ஜிதன்ராம் மாஞ்சிக்கு அவர் என்ன செய்தார். மத்தியிலுள்ள அரசாங்கம் யாருக்கும் சாதகமாக நடந்து கொள்ளாது.
வளர்ச்சிக்காக மக்கள் வாக்களிக்க வேண்டிய தருணம் இது. பீகாரின் வளர்ச்சி நாட்டோடு தொடர்புடையது. ஏராளமான இளைஞர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.
பீகார் மாநில இளைஞர்கள், பெற்றோரை தனியாக விட்டுவிட்டு வேலை தேடி வெளியூர் செல்கிறார்கள். அவர்களின் வேலைவாய்ப்பு பிரச்னைக்கு தீர்வுகாண எங்களுக்கு வாக்களியுங்கள். எனது அரசு, பணக்காரர்களுக்கு ஆதரவான அரசு என்று கூறுவதை ஏற்க முடியாது. ஏழைகளுக்காக ஜன்தன் யோஜனா, அனைவருக்கும் வீடு, முத்ரா வங்கி, செல்வமகள் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.
மாவோயிஸ்டுகள் வன்முறை பாதையை கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டிய நேரம் இது.. துப்பாக்கி தோட்டாக்களால் எந்த பிரச்னைக்கும் தீர்வுகாண முடியாது.
இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications