Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீகாரில் தொடரும் துயரம்! ஒரே மாதத்தில் 3-வது பாலம் இடிந்து விழுந்ததால் பகீர்!

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் ஒரே மாதத்தில் கட்டப்பட்ட நிலையில் 3-வது பாலம் இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போதே பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் தொடருகின்றன. ஏப்ரல் மாதம் 30-ந் தேதி கங்கை நதி மீது கட்டப்படுகிற ரூ1700 கோடி மதிப்பிலான பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதன் மற்றொரு பகுதி ஜூன் 4-ந் தேதி இடிந்து விழுந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

Bihar: Third incident in June- bridge collapses in Vaishali

இதே ஜூன் மாதத்தில் 2-வது பாலம் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் இடிந்து விழுந்தது. கல்கலியா, அராரியா நதிகள் மீது கட்டப்பட்டு வரும் பாலம் ஒன்றின் ஒரு பகுதி சில நாட்களுக்கு முன்னர் இடிந்து விழுந்தது.

இந்த ஜூன் மாதத்தில் 3-வது சம்பவமாக மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவம் வைசாலி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. வைசாலி- ரகோபூர் ஆகியவற்றை இணைப்பதற்காக கங்கை நதி மீது பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பாலத்தின் ஒரு பகுதி ஆற்று நீரால் அடித்து செல்லப்பட்டது.

பீகார் மாநிலத்தில் கடந்த சில மாதங்களி 4 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. அதுவும் ஒரே மாதத்தில் 3 பாலங்கள் இடிந்து விழுந்து உள்ளன. இது தொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+