பிலாஸ்பூர் ரயில் விபத்து! பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு.. சத்தீஸ்கர் முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நடந்த ரயில் விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மாலை சுமார் 4 மணியளவில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. கெவ்ரா பகுதியில் இருந்து பிலாஸ்பூருக்குச் சென்று கொண்டிருந்த MEMU பயணிகள் ரயில், சிக்னலை கவனிக்காமல் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், "இந்த விபத்தின் தாக்கம் மிகவும் மோசமாக இருந்தது. மோதிய வேகத்தில் பயணிகள் ரயிலின் ஒரு பெட்டி, சரக்கு ரயிலின் பெட்டி மீது ஏறியது" என்று தெரிவித்துள்ளனர். சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் சாய், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹5 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 இழப்பீடும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "பிலாஸ்பூர் அருகே ஏற்பட்ட ரயில் விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இது மிகவும் வருத்தமான செய்தி. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹5 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும், மேலும் அவர்களுக்கு ₹50,000 நிதியுதவியும் அளிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் அருண் சாவ் இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பிலாஸ்பூரில் ஒரு துரதிர்ஷ்டவசமான ரயில் விபத்து நடந்தது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகேல், இந்த விபத்துக்கு காரணம் மத்திய அரசுதான் என்று குற்றம் சாட்டியுள்ளார். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை விட, நிலக்கரி போக்குவரத்தில் அரசு அதிக கவனம் செலுத்தியதுதான் இந்த விபத்துக்குக் காரணம் என விமர்சித்திருக்கிறார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications