பிலாஸ்பூர் ரயில் விபத்து! பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு.. சத்தீஸ்கர் முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நடந்த ரயில் விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மாலை சுமார் 4 மணியளவில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. கெவ்ரா பகுதியில் இருந்து பிலாஸ்பூருக்குச் சென்று கொண்டிருந்த MEMU பயணிகள் ரயில், சிக்னலை கவனிக்காமல் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், "இந்த விபத்தின் தாக்கம் மிகவும் மோசமாக இருந்தது. மோதிய வேகத்தில் பயணிகள் ரயிலின் ஒரு பெட்டி, சரக்கு ரயிலின் பெட்டி மீது ஏறியது" என்று தெரிவித்துள்ளனர். சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் சாய், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹5 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 இழப்பீடும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "பிலாஸ்பூர் அருகே ஏற்பட்ட ரயில் விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இது மிகவும் வருத்தமான செய்தி. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹5 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும், மேலும் அவர்களுக்கு ₹50,000 நிதியுதவியும் அளிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் அருண் சாவ் இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பிலாஸ்பூரில் ஒரு துரதிர்ஷ்டவசமான ரயில் விபத்து நடந்தது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகேல், இந்த விபத்துக்கு காரணம் மத்திய அரசுதான் என்று குற்றம் சாட்டியுள்ளார். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை விட, நிலக்கரி போக்குவரத்தில் அரசு அதிக கவனம் செலுத்தியதுதான் இந்த விபத்துக்குக் காரணம் என விமர்சித்திருக்கிறார்.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications