பன்றிக்காய்ச்சல் போச்சு... பறவைக்காய்ச்சல் பரவுது...: ஆந்திராவில் 1 லட்சம் கோழிகள் அழிப்பு

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத் நகரில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் 1 லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டன.

ஹைதராபாத்தை அடுத்துள்ள ரங்கா ரெட்டி மாவட்டம் தொர்ரூரு கிராமத்தில் உள்ள கோழிப் பண்ணையில் கடந்த ஒரு வாரத்தில் 20 ஆயிரம் கோழிகள் நோய் தாக்கி இறந்தன.

Bird flu alert in Telangana, AP, two lakh birds to be culled

கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், பறவைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு கோழிகள் இறந்தது தெரியவந்தது. இந்த பண்ணையில் சுமார் 1 லட்சம் கோழிகள் உள்ளன.

சமீபத்தில் இறந்த கோழிகளை பண்ணையின் பின்புறம் வீசியதால், அவை மழையில் அடித்து செல்லப்பட்டுள்ளன.அங்குள்ள மற்ற கோழிகளுக்கும் பறவைக்காய்ச்சல் நோய் பரவியதாக விசாரணையில் தெரியவந்தது.

Bird flu alert in Telangana, AP, two lakh birds to be culled

பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க அந்த பண்ணையில் இருந்த சுமார் 1 லட்சம் கோழிகளை உடனடியாக அழிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பண்ணையில் இருந்த கோழிகள் நேற்று அழிக்கப்பட்டு மொத்தமாக புதைக்கப்பட்டன. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஹைதராபாத், மேதக், நல்கொண்டா ஆகிய மாவட்டங்களிலும் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதா என சுகாதார துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். இதன் மூலம் ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இறைச்சிக் கோழியின் விலை குறைந்துள்ளது.

Bird flu alert in Telangana, AP, two lakh birds to be culled

கடந்த 4 மாதகாலமாக ஆந்திரா, தெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சல் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது பரவி வரும் பறவைக்காய்ச்சல் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+