மேற்கு வங்கம் விரைவில் காவிகளின் கோட்டையாகும்? லோக்சபா தேர்தலில் அதகள வெற்றியை அள்ளிய பாஜக!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தை முழுமையாக பாஜக கைப்பற்றுவதற்காக சாத்தியங்கள் இருப்பதையே லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி உள்ளன.
2014 லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளில்தான் பாஜக வென்றது. ஆனால் இம்முறை ஆழிப்பேரலையைப் போல வடக்கு மேற்கு வங்கத்தின் அத்தனை தொகுதிகளையும் அள்ளிக் கொண்டு மொத்தம் 18 தொகுதிகளில் வெற்றியைப் பெற்றுள்ளது. இடதுசாரிகள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸின் கோட்டைகளுக்குள் வெற்றி கொடி நாட்டியிருக்கிறது.

முக்கிய காரணங்கள்
பாஜகவுக்கு ஆதரவான பேரலை வீசியது; வடக்கு வங்கத்தில் ஒட்டுமொத்தமாக வென்றது; மாநிலத்தின் மேற்கு பகுதியாக ஜங்கல் மஹால் பகுதியையும் கைப்பற்றியதுதான் பாஜகவின் வெற்றிக்கான காரணங்கள்.

பாஜக வாக்கு சதவீதம்
பொதுவாகவே ஒவ்வொரு லோக்சபா தொகுதியிலும் பாஜகவின் வாக்கு சதவீதம் மிக அபாரமாக உயர்ந்துள்ளது. பஹரம்பூர் தொகுதியில் மிக குறைவாக 3.93%; புருலியாவில் 42.15% என்கிற அளவில் வாக்கு உயர்வை பெற்றுள்ளது பாஜக. சராசரியாக ஒவ்வொரு தொகுதியிலும் 9 முதல் 35% வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. 19 தொகுதிகளில் 25% வாக்கு சதவீதம் உயர்ந்திருக்கிறது.

இடதுசாரிகளுக்கு அடி
இடதுசாரிகளின் வாக்கு சதவீதம் அப்படியே சரிவை சந்தித்துள்ளது. மிக குறைந்தபட்சமாக 10.6% டார்ஜிலிங்கிலும் அதிகபட்சமாக மதுர்பூரில் 32.1% என்கிற அளவில் வாக்குகளைப் பறிகொடுத்திருக்கிறது இடதுசாரி கட்சிகள். 12 தொகுதிகளில் 25% வாக்குகளை இழந்திருக்கிறது இடதுசாரி கட்சிகள்.

ஏற்றம், இறக்கத்தில் திரிணாமுல்
திரிணாமுல் காங்கிரஸைப் பொறுத்தவரையில் அதன் வாக்கு சதவீதம் உயர்ந்தும் இருக்கிறது; சரிவையும் சந்தித்துள்ளது. 16 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. 26 தொகுதிகளில் அதன் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. ஆரம்பாக் தொகுதியில் 10..78% சரிவையும் ஜங்கிபூரில் 24.61% உயர்வையும் பெற்றிருக்கிறது திரிணாமுல் காங்கிரஸ். 10 தொகுதிகளில் சராசரியாக 10% வாக்குகள் திரிணாமுல் காங்கிரஸுக்கு அதிகரித்திருக்கிறது.

இடது ஓட்டுகள் எங்கே?
திரிணாமுல் காங்கிரஸ் அரசு மீதான நம்பகத்தன்மை குறைந்ததும் மோடி மீதான நம்பிக்கை அதிகரித்ததும் இந்த நிலைமைக்கு காரணம். இஸ்லாமியர்களுகக்கு எதிரான மனநிலையும் இந்த தேர்தல் முடிவுகளுக்கு ஒரு காரணமாகும். இதைவிட பெரும்பகுதியான இடதுசாரி வாக்காளர்கள் பாஜகவுக்கும் திரிணாமுலுக்கும் இம்முறை வாக்களித்தனர். இடதுசாரிகள் மேற்கு வங்கத்தில் தங்களது அடித்தளத்தையே பறிகொடுத்துவிட்டனர் என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
-
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications