பிரமாண்ட வெற்றி ஊர்வலத்துடன் டெல்லி செல்லும் நரேந்திர மோடி!
டெல்லி: பாராளுமன்றத் தேர்தலில் அபார வெற்றிப் பெற்ற நரேந்திர மோடியை பெரும் வெற்றி ஊர்வலத்துடன் டெல்லிக்கு அழைத்துச் செல்ல பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.
10 ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர் மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் முறைப்படி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இதற்காக சனிக்கிழமை காலை டெல்லி செல்லும் அவருக்கு, பா.ஜ., நிர்வாகிகளும், தொண்டர்களும், பிரமாண்ட வரவேற்பு கொடுக்க திட்டமிட்டுள்ளனர். டெல்லி விமான நிலையத்தில் இருந்து, பா.ஜ., தலைமை அலுவலகம் வரை, பிரமாண்ட வெற்றி ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள, தான் போட்டியிட்டு வென்ற மற்றொரு தொகுதியான வாரணாசிக்கு செல்கிறார். அங்கு, கட்சி தொண்டர்கள் அவருக்கு, பிரமாண்ட வரவேற்பு அளிக்கின்றனர்.
வாரணாசியில் உள்ள கங்கை நதிக்கரைக்கு சென்று, சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகளில் பங்கேற்கும் மோடி, அங்கிருந்து டெல்லி செல்கிறார்.












Click it and Unblock the Notifications